தமிழகத்தில் மே 30, 31 ஆம் தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை? அதிகாரிகள் திட்டவட்ட அறிவிப்பு!
வங்கி ஊழியர்களின் இரண்டு நாள்( மே 30, மே 31) வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனால் மே 30, 31 தேதிகளில் வங்கிகள் இரண்டு நாட்கள் இயங்காது என வெளியாகும் தகவல் தவறானது, யாரும் இந்த செய்தியை நம்ப வேண்டாம் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வேலைநிறுத்த போராட்டம்
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வாரக் கணக்கில் கூட நடக்கும். இதனால் பொதுமக்களுக்கான வங்கிச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கும். பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து மே 30, 31 ஆகிய தேதிகளில் ஸ்ட்ரைக் நடைபெறும் என பேங்க் ஆஃப் பரோடா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரு பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் அறிவித்தனர்.
சென்னை அண்ணா பல்கலையில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – 11 மாணவர்களுக்கு தொற்று உறுதி!
இதன்படி மே 30, 31 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வங்கி கிளைகள் மூடப்பட்டு, வங்கி ஊழியர்கள் பேரணி, தர்ணா போன்ற போராட்டங்களில் ஈடுபட போவதாக தகவல் இணையம் முழுவதும் வைரலாகி வந்தது. இருப்பினும் தற்போது முக்கிய அறிவிப்பு ஓன்று வெளியாகியுள்ளது. வங்கிகள் வரும் 30, 31ம் தேதிகளில் வழக்கம் போல் செயல்படும். வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் என வரும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என, வங்கி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
Exams Daily Mobile App Download
இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியது, கிளைகள் குறைப்பு, ஊழியர்கள் பணியிடமாற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா’ ஊழியர்கள், வரும் 30, 31ம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய இருந்தனர். இது தொடர்பாக, வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் நிர்வாகம் இடையே நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால், அவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டனர்.எனவே, வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என வெளியான தகவல் தவறானது. இதை, பொது மக்கள் நம்ப வேண்டாம். எனவே தமிழகத்தில் வரும் 30, 31ம் தேதிகளில் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.