சென்னை அண்ணா பல்கலையில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – 11 மாணவர்களுக்கு தொற்று உறுதி!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் கொரோனா பரிசோதனை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனாவின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு அனைத்து தொழிற்துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அத்துடன் இந்தியாவில் கொரோனாவின் 4ம் அலையின் தாக்கம் பரவத் தொடங்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் அறிவிப்பு!
அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் மேலும் தற்போது ஓமைக்ரான் வைரஸின் புதிய வகையான பிஏ 4 வைரஸ் தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளன.
Exams Daily Mobile App Download
மேலும் தற்போது கொரோனா பரிசோதனை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 மாணவர்களை பரிசோதனை மேற்கொண்டதில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது 160 மாணவர்களை பரிசோதித்ததில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.