தமிழகத்தில் பேப்பரில் வடை, பஜ்ஜி வழங்க தடை – ஆட்சியர் புதிய உத்தரவு!
தமிழகத்தில் ஹோட்டல்களில் விற்கப்படும் உணவு பொருள்களின் தரம் குறித்த சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் டீக்கடையில் அச்சிட்ட பேப்பரில் வடை, பஜ்ஜி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ஆட்சியர் உத்தரவு:
தமிழகத்தில் பல மாவட்டங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பல உணவகங்களில் தரமற்ற உணவுகளை சாப்பிட்டு உயிரிழப்போர் செய்திகள் நாளுக்கு நாள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில் அரசு இதில் கண்ணும் கருத்துமாக பார்க்கத் தொடங்கிவிட்டது. அந்த வகையில் சென்னையில் பல பெரிய உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகள் கைப்பற்றப்பட்டது. மேலும் அந்த ஹோட்டல்கள் மூடப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து பல ஹோட்டல்களில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சிறிய கடைகளில் கூட தயாரிக்கப்படும் உணவுகள் சுத்தமாகவும், தரமாகவும் இருக்க வேண்டும் என உணவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவுகளை பரிமாறும் போது கையுறை, தலை உறை போன்றவை அணிய வேண்டும் எனவும் அரசு தரப்பில் அடிக்கடி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
TET தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ!
அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கடையில் விற்கப்படும் உணவுகள் குறித்த புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் டீக்கடையில் அச்சிட்ட பேப்பரில் வடை, பஜ்ஜி வழங்க தடை விதிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். தடையை மீறி உணவுப்பொருட்களை அச்சிட்ட பேப்பரில் தந்தால் அபராதம், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் அந்த உத்தரவில் எச்சரித்துள்ளார்.