பான் & ஆதார் கார்டு இணைப்பு கட்டாயம் – மீறினால் இரு மடங்காக அபராதம்!

0
பான் & ஆதார் கார்டு இணைப்பு கட்டாயம் - மீறினால் இரு மடங்காக அபராதம்!
பான் & ஆதார் கார்டு இணைப்பு கட்டாயம் - மீறினால் இரு மடங்காக அபராதம்!
பான் & ஆதார் கார்டு இணைப்பு கட்டாயம் – மீறினால் இரு மடங்காக அபராதம்!

இந்தியாவில் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க கால அவகாசமும் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசம் முடிவடைந்த பிறகு ஆதார் மற்றும் பான் கார்டை இணைபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆதார் – பான்:

இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் அட்டை மத்திய அரசால் வழங்கப்படும். இந்த ஆதார் அட்டை ரேஷன் கார்டு, வாக்குரிமை அட்டை போன்றவைகள் போல முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். அரசுத்துறை, தனியார்துறை, பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனைத்து வேலைகளுக்கும் ஆதார் எண் அவசியம். அதுமட்டுமில்லாமல் தனிநபர் சார்ந்த பிற வேலைகளுக்கும் ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் ஆதார் கார்டு இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலை வந்து விட்டது. மேலும், இந்த ஆதாரை பான் கார்டுடன் இணைக்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்க அரசு கால அவகாசம் வழங்கியது.

Exams Daily Mobile App Download

அதன்படி 2022 மார்ச் 31ம் தேதி வரை ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதற்குள் அனைத்து ஆதார், பான் அட்டைதாரர்களும் இணைக்க அறிவுறுத்தப்பட்டது. அதன் பிறகு ஆதார், பான் எண்ணை இணைப்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. அபாரதத்துடன் ஜூன் 30ம் தேதி வரை இணைத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அவகாசமும் நாளையுடன் முடிவடைய உள்ளது. ஜூலை 1 க்கு பிறகு ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்கும் நபர்களுக்கு இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – ‘WIFI’ வசதி அறிமுகம்!

அதாவது ஜூலை 1ம் தேதிக்கு மேல் ஆதார் , பான் கார்டு இணைக்க விரும்புபவர்கள் ரூ. 1000 அபராதமாக செலுத்த வேண்டும். போலியான பான் கார்டுகளை தவிர்க்கும் நோக்கில் பான் – ஆதார் இணைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பான் – ஆதார் கார்டை இணைக்காவிட்டால் நீங்கள் வங்கி சேவைகளை மேற்கொள்ள முடியாது. அத்துடன் உங்களின் பான் கார்டும் செயலற்றதாகி விடும். அதனால் இரு மடங்கு அபராதத்தை தவிர்த்து நாளைக்குள் ஆதார் பான் கார்டை இணையுங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!