தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – ‘WIFI’ வசதி அறிமுகம்!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பி.எம்.வாணி திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளின் வாயிலாக ஒரு சிறப்பான வசதியை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான மேலும் கூடுதலான தகவல்களை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலமாக மலிவான விலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அரசின் நலத்திட்டங்கள் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசின் ‘பி.எம்.வாணி’ என்ற திட்டத்தின் கீழ் மக்களுக்கு இணையதள சேவை வழங்க ரேஷன் கடைகளை தேர்ந்தெடுத்துள்ளது. ஏனெனில் ரேஷன் கடைகள் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு 2 கி.மீ தொலைவில் இருப்பதால் ரேஷன் கடைகளை பொது தரவு மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் இதே போன்று பிஎம் வாணி திட்டம், ரயில் டெல் திட்டம் மூலமாக முதற்கட்டமாக 100 ரயில் நிலையங்களில் இணைய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை பயன்படுத்த விரும்பும் நபர்கள் Wi-DOT எனும் செயலியை பதிவிறக்கம் வேண்டும். அத்துடன் இதற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய கேஒய்சி கேட்கப்படுகிறது. இது தொடர்பாக கூட்டுறவு துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் ரேஷன் கடைகளை பொது தரவு மையமாக மாற்ற வசதிகள் உள்ளதா என்று ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து ரேஷன் கடைகளில், ‘WIFI’ வசதி ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடைக்கு அருகில் இருப்பவர்கள் தங்களின் மொபைல், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து இணையதள சேவையை பெற முடியும். இதனை பயன்படுத்தும் நபர்கள் இணையதள சேவையை பயன்படுத்துவதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். இதன் மூலமாக ரேஷன் கடைகளில் கூடுதலான வருவாய் கிடைக்கும். அத்துடன் இந்த திட்டத்தை முதற்கட்டமாக தமிழகத்தில் அதிக இட வசதியுடன் கூடிய சொந்த கட்டடங்களில் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் செயல்படுத்த கூட்டுறவுத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.