குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கோபி, வீட்டை விட்டு துரத்தும் ஈஸ்வரி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம்!

0
குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கோபி, வீட்டை விட்டு துரத்தும் ஈஸ்வரி - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த திருப்பம்!
குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கோபி, வீட்டை விட்டு துரத்தும் ஈஸ்வரி - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த திருப்பம்!
குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கோபி, வீட்டை விட்டு துரத்தும் ஈஸ்வரி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம்!

முதலில் குடித்துவிட்டு ராதிகாவின் வீட்டிற்கு சென்றதும் ராதிகா கோபியை விரட்டி விடுகிறார். பின்பு பாக்கியாவின் வீட்டிற்கு வரும் கோபியை ஈஸ்வரியும் துரத்திவிடும் படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவிடம் கோபி எப்பொழுது கையும் களவுமாக பிடிபட்ட போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அதாவது ராதிகாவும் கோபியும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிந்துகொண்டு ராதிகாவிடம் நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறவரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு எதுவாக இருந்தாலும் முடிவெடுங்கள் என மூர்த்தி கூறுகிறார். இது மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படத்தை பாருங்கள் என கூறிவிட்டு கிளம்புகிறார். பின்பு ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகம் வருகிறது.

கோபியின் நடவடிக்கையால் மனம் நொந்து படுக்கையிலேயே மரணமடைந்த தாத்தா – ப்ரோமோ ரிலீஸ்!

கோபி வீட்டிற்கு வந்ததுமே உங்களது குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படத்தை எனக்கு காட்டுங்கள் என கூறுகிறார். ஆனால் கோபி காட்ட மறுக்கிறார். உடனே கோபியை ராதிகா வீட்டை விட்டு வெளியே கிளம்புங்கள் என கூறி கோபியை விரட்டி விடுகிறார். இதனால் மனமுடைந்து குடித்து விட்டு ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். மறுபடியும் உங்கள் வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் அல்லது வீட்டில் குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படத்தை காட்டுங்கள் என ராதிகா கேட்கிறார்.

Exams Daily Mobile App Download

உடனே ராதிகாவிடம் கோபியும் பாக்கியாவும் சேர்ந்து நிற்கும் படியான புகைப்படத்தை எடுத்துக் காட்டுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்ததும் இத்தனை நாட்களாக பாக்கியா டீச்சரையும் என்னையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என கூறி கதறி அழுகிறார். பின்பு இனிமேல் வீட்டிற்கு வர வேண்டாம் என கோபியை விரட்டி விடுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் பாக்கியாவின் வீட்டிற்கு செல்கிறார். எப்போதும் குடிக்காத கோபி தற்போது ஏன் குடிக்க வேண்டும் என மிகப் பெரிய பிரச்சினை வருகிறது. பின்பு ஈஸ்வரியும் கோபியை வீட்டை விட்டு வெளியே துரத்தி விடும் படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!