கோபியின் நடவடிக்கையால் மனம் நொந்து படுக்கையிலேயே மரணமடைந்த தாத்தா – ப்ரோமோ ரிலீஸ்!
கோபி பற்றிய அனைத்து உண்மைகளும் ராமமூர்த்தி தாத்தாவிற்கு தெரிந்திருந்தாலும் கூட யாரிடமும் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கிறார். தற்போது கோபியை நினைத்து வருந்தியபடியே படுக்கையிலேயே தாத்தா மரணம் அடைவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
மரணமடைந்த தாத்தா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் மனைவி தான் பாக்கியா என்பது எப்போது தான் ராதிகாவிற்கு தெரிய வரப்போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அதாவது மூர்த்தி கூறியதிலிருந்து கோபி மீது ராதிகாவிற்கு சந்தேகம் வருகிறது. எப்படியாவது கோபியின் குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படத்தை பார்த்து விட வேண்டும் அல்லது வீட்டிற்கு செல்ல வேண்டும் என ராதிகா நினைக்கிறார். ஆனால், கோபி வீட்டிற்கு அழைத்துச் செல்லவே மாட்டேன் என அடம் பிடிக்கிறார்.
கோபி பற்றி பாக்கியாவிடம் உண்மையை கூறும் ராதிகா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
எப்பொழுது கோபி வீட்டிற்கு வந்தாலும் எப்பொழுது என்னை வீட்டிற்கு கூட்டிச் செல்லுவீர்கள் என்று கேட்டு சண்டை போடுகிறார். இதனால் ராதிகாவிடம் வசமாக மாட்டிக் கொள்ளப் போகிறோம் என பயந்து கோபி நொந்து போயிருக்கிறார். இந்த சமயத்தில் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு கோபி ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். கோபி வீட்டிற்கு வந்ததுமே கோபியிடம் மறுபடியும் எப்போது என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வீர்கள் என கேட்கிறார்.
Exams Daily Mobile App Download
உடனே கோபி பாக்கியாவும் கோபியும் இருக்கும் படியான புகைப்படத்தை எடுத்து ராதிகாவிடம் காட்டுகிறார். அந்த புகைப்படத்தை பார்த்ததும் ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இவ்வளவு நாட்களாக நீங்களும் என்னை ஏமாற்றி விட்டீர்கள் என கதறுகிறார். இந்த சமயத்தில் கோபியின் நடவடிக்கைகளைப் பார்த்து ராமமூர்த்தி தாத்தாவும் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். கோபியை பற்றி வெளியே சொல்ல முடியாமல் சகித்து கொள்ளவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். கோபியை நினைத்தே படுக்கை அறையிலேயே ராமமூர்த்தி தாத்தா மரணம் அடைவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.