கோபியை விட்டு பிரியும் பாக்கியா, அதிர்ச்சியின் உச்சத்தில் குடும்பம் – சீரியலில் அதிரடி திருப்பம்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி செய்த தவறுக்காக அவரை நிற்க வைத்து கேள்வி கேட்கும் பாக்கியா கோபியை விட்டு பிரிய முடிவு செய்கிறார். இதனுடன் பாக்கியா அந்த வீட்டை விட்டு வெளியேறுவது போல வெளியாகி இருக்கும் அதிரடியான ப்ரோமோ ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி பற்றிய உண்மைகளை குடும்பத்திற்கு சொல்லும் பாக்கியா அவரை விட்டு பிரிவது போல ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இதுவரை அமைதியான பெண்ணாக, கணவனை முழுமையாக நம்பும் அப்பாவி மனைவியாக இருந்து வந்த பாக்கியா தனது கணவன் நடத்திய நாடகத்தை அறிந்து கொண்டதும் வெகுண்டு எழுகிறார். அந்த வகையில் முன்எப்போதும் வராத தைரியத்தை வரவழைத்து கொண்டு கோபியை நிற்க வைத்து கேள்வி கேட்கும் பாக்கியா இப்போது ஒரு அதிரடி முடிவு எடுக்கிறார்.
தாலியை கழட்டி கோபியின் முகத்தில் விட்டெறிந்த பாக்கியா – அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
இது குறித்த ப்ரோமோவில், கோபியுடன் பழகும் பெண் வேறு யாருமல்ல அது ராதிகா தான் என்று பாக்கியா சொல்ல எனக்கு அப்போவே தெரியும் அவள் சரி இல்லை என்று தனது மகனுக்கு வக்காளத்து வாங்குகிறார் அம்மா ஈஸ்வரி. ஆனால் அதை மறுத்து பேசும் பாக்கியா, ‘இல்லை அத்தை உங்க மகன் பெரிய நடிகர்’ என்று சொல்லி விட்டு, ‘எதற்காக சொந்த குடும்பத்தை இப்படி நடிச்சு ஏமாத்துனீங்க. இதுல உங்களுக்கு என்ன கெடச்சது. இப்போது நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்.
Exams Daily Mobile App Download
உங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை நீங்க சந்தோஷமா வாழ்ந்துக்கோங்க. ஆனால், இனியும் ஒரு முட்டாளா, ஏமாளியா, பைத்தியக்காரியாக அதை நம்புவதற்கு நான் இங்கு இருக்க மாட்டேன்’ என்று சொல்லி விட்டு விறுவிறுவென அங்கிருந்து நடந்து செல்கிறார். இப்போது பாக்கியாவின் இந்த முடிவை எதிர்பார்க்காத குடும்பம் அதிர்ச்சியில் மொத்தமாக உறைந்து போகிறது. இருந்தாலும் அம்மாவை இழக்க விரும்பாத பிள்ளைகள் பாக்கியாவை தடுத்து நிறுத்துவதற்காக அவருக்கு பின்னாக செல்வதுடன் இந்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் கவனம் பெற்று வருகிறது.