குடும்பத்தினரின் முன்னிலையில் உண்மையை கூறிவிடும் மூர்த்தி – கோபியை திட்டி தீர்த்த பாக்கியா!

0
குடும்பத்தினரின் முன்னிலையில் உண்மையை கூறிவிடும் மூர்த்தி - கோபியை திட்டி தீர்த்த பாக்கியா!
குடும்பத்தினரின் முன்னிலையில் உண்மையை கூறிவிடும் மூர்த்தி - கோபியை திட்டி தீர்த்த பாக்கியா!
குடும்பத்தினரின் முன்னிலையில் உண்மையை கூறிவிடும் மூர்த்தி – கோபியை திட்டி தீர்த்த பாக்கியா!

ராதிகாவை தான் கோபி திருமணம் செய்துகொள்ள போகிறார் என்கிற விஷயம் மூர்த்திக்கு தற்போது தெரிந்து விட்டது. மூர்த்தி இதை குடும்பத்தினரிடம் கூறும்படியாகவும் இதனால் பாக்கியா கோபியிடம் சண்டை போடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பல மாதங்களாக குடும்பத்தில் உள்ள அனைவரின் கண்ணிலும் மண்ணை அள்ளி தூவிவிட்டு ராதிகாவுடன் கோபி காதலை வளர்த்து வந்தார். ஆனால், இந்த முறை தப்பிக்கவே முடியாத அளவுக்கு கோபி மாட்டிக்கொண்டுள்ளார். பிறந்தநாள் விழாவில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என ராதிகா பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார். ராதிகா வரும் நேரம் பார்த்து சரியாக கோபி மீட்டிங் நடக்கிறது என பொய் சொல்லி ரூமை பூட்டி கொள்கிறார்.

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – நிஷா வெளியிட்ட பதிவு!

ராதிகா வீட்டை விட்டு கிளம்பியதுமே இனிமேல் பிரச்சனையில்லை என கோபி நிம்மதியாக பெருமூச்சு விடுகிறார். ராதிகாவை மட்டும் ஏன் கோபி பார்க்கவே வர மாட்டேங்குறார் என குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே சந்தேகம் இருக்கிறது. பின்பு சாதாரணமாக கோபி ராதிகாவை சந்திக்க செல்கிறார். ராதிகாவும் கோபியும் நெருக்கமாக நின்று பேசி கொண்டிருப்பதை மூர்த்தி பார்த்து அதிர்ச்சியடைகிறார். ராதிகா வீட்டிற்கு வரும் போது கோபி மச்சான் ராதிகாவை பார்க்க வரவே இல்லை. தற்போது ஏன் ராதிகாவை சந்தித்து பேசி கொண்டிருக்க வேண்டும் என சந்தேகப்படுகிறார்.

Exams Daily Mobile App Download

சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள தனத்தையும் அழைத்துக் கொண்டு மூர்த்தி ராதிகாவின் வீட்டிற்கு கிளம்புகிறார். நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகும் வருங்கால கணவரின் புகைப்படத்தை காட்டுங்கள் என கேட்கிறார். ராதிகாவும் கோபியின் புகைப்படத்தை எடுத்து காட்டுகிறார். அந்த புகைப்படத்தை பார்த்ததுமே மூர்த்தியும், தனமும் அதிர்ச்சியடைகின்றனர். பின்பு கோபியிடம் சென்று மூர்த்தி இது பற்றி பேசுகிறார். கோவமான கோபி வந்த வேலையை மட்டும் பார்த்து விட்டு கிளம்புங்கள் என கூறி சண்டை போடுகிறார். இந்நிலையில், குடும்பத்தினர்கள் அனைவரின் முன்னிலையிலும் கோபியை பற்றிய உண்மையை மூர்த்தி கூறிவிடுவது போன்றும், பாக்கியா அதிர்ச்சியடைந்து கோபியை திட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!