ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – நிஷா வெளியிட்ட பதிவு!
தலையணை பூக்கள் சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நிஷா கிருஷ்ணன் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செம்பருத்தி தொடரில் வக்கீலாக நடித்து கொண்டிருக்கிறார். அவர் தற்போது வக்கீலாக நடிக்கும் அனுபவம் குறித்து ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
செம்பருத்தி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் எனும் சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் நிஷா கிருஷ்ணன். இந்த சீரியலை தொடர்ந்து சரவணன் மீனாட்சி, மஹாபாரதம், தலையணை பூக்கள் என பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்த சீரியல்களில் மட்டுமல்லாமல் நான் சிகப்பு மனிதன், இவன் வேற மாதிரி போன்ற ஹிட் திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு நிஷா கிருஷ்ணன் அவ்வளவாக திரைப்படங்களிலும் , சீரியல்களிலும் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.
விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சீரியல் ஹீரோ – எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்!
தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து நிஷா கிருஷ்ணன் கூறியுள்ளார். இதுவரை நான் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்ததே இல்லை. என் குடும்பத்தில் மட்டுமே நிறைய பேர் வக்கீலாக இருக்கிறார்கள். இந்த வீட்டிலும் சட்டம் சம்மந்தப்பட்ட நிறைய புத்தகங்கள் இருக்கும். நான் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறேன் என கூறியதும் குடும்பத்தில் உள்ள அனைவருமே மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
Exams Daily Mobile App Download
தலையணைப் பூக்கள் சீரியல் கெட்டப்பிலேயே தான் செம்பருத்தி சீரியலிலும் நடிக்க இருக்கிறேன். அந்த சீரியலின் நினைவுகள் வந்து வந்து சென்று கொண்டிருந்தது. தலையணைப் பூக்கள் சீரியலில் வேதவல்லி என்கிற பெயரில் நடித்து கொண்டிருந்தேன். ஆனால், செம்பருத்தி தொடரில் கீதா சுப்பிரமணியம் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறேன். பெயர் மட்டும் தான் மாற்றமே தவிர எனக்கு தலையணை பூக்கள் சீரியலில் நடித்து கொண்டிருப்பது போல தான் இருக்கிறது என நிஷா கிருஷ்ணன் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.