எழில் அமிர்தா காதலை ஏற்க மறுத்த பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் எழில் அமிர்தாவை காதலிக்க ஆனால் அமிர்தா முதலில் எழில் காதலை ஏற்க தயங்குகிறார். ஆனால் இப்போது அமிர்தாவிற்கும் காதல் வர எழில் அதை நினைத்து சந்தோசமாக இருக்கிறார். எழில் காதலை பாக்கியா ஏற்றுக் கொள்வாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அமிர்தாவை காதலிப்பதாக சொல்ல ஆனால் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எழிலின் குணம் பிடித்து அமிர்தாவும் எழில் மீது நம்பிக்கை வைக்கிறார். அவர் தன்னுடைய காதலை நேரடியாக வெளிப்படுத்த அதை நினைத்து எழில் சந்தோஷப்படுகிறார். அமிர்தாவின் அம்மா அப்பா இதெல்லாம் சரியாக வருமா உனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. அவர்கள் எப்படி இதை ஏற்றுக் கொள்வார்கள் என கேட்க அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என எழில் சொல்கிறார்.
விஜே சித்ராவுக்காக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுஜிதா, KPY பாலா செய்த காரியம் – ரசிகர்கள் உருக்கம்!
என் அம்மாவின் ஆதரவு எப்போதும் எனக்கு இருக்கும் என எழில் சொல்கிறார். அதனால் அமிர்தாவிற்கும், அவரது அம்மா அப்பாவிற்கும் சற்று நிம்மதியாக இருக்கிறது. எழில் வீட்டிற்கு வந்து அமிர்தாவிற்கு காதல் வந்ததை நினைத்து மிகவும் சந்தோசப்படுகிறார். ஈஸ்வரி, இனியா, செல்வி பாக்கியாவிடம் நடனம் ஆடி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்ன நடந்தது என தெரியாமல் பாக்கியா இருக்கிறார். ஏற்கனவே ஈஸ்வரிக்கு அமிர்தா உடன் பழகுவது பிடிக்காமல் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதனால் அவர் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார். இருந்தாலும் பாக்கியா தன்னை கண்டிப்பாக புரிந்து கொள்வார் என்பது எழில் நம்பிக்கை. ஆனால் இனி வரப்போகும் எபிசோடுகளில் அப்படி இல்லாமல் எழில் இந்த விஷயத்தை சொன்னதும் பாக்கியாவும் அதற்கு எதிராக இருக்க போகிறார். அதனால் எழில் என்ன செய்வது என தெரியாமல் அமிர்தாவிற்கு கொடுத்த நம்பிக்கையை எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் இருக்கிறார். இவை எல்லாம் இனி வரப்போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது.