விஜே சித்ராவுக்காக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுஜிதா, KPY பாலா செய்த காரியம் – ரசிகர்கள் உருக்கம்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை சித்ராவின் 30வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூறும் விதமாக நடிகை சுஜிதா, கம்பம் மீனா மற்றும் காமெடியன் பாலா உட்பட ரசிகர்கள் பலரும் நெகிழ்வான பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகை சித்ரா
தமிழ் சின்னத்திரையில் ஒரு ஆண்டுக்கு முன்பாக முன்னணி நடிகையாகவும், மக்களின் நாயகியாகவும் வலம் வந்தவர் நடிகை சித்ரா. அதாவது, சினிமாவில் ஒரு ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசையில், சாதாரண பார்வையாளராக கேமராவுக்கு முன்னாள் வந்து பின் நாட்களில் ஊரே போற்றும் அளவுக்கு உருவான நடிகை சித்ரா, இறந்து இப்போது ஒரு ஆண்டு கடந்து விட்டது. சினிமா திரைப்படம், சீரியல்கள் என நடித்து பிரபலமாக இருந்த போதிலும் இவரிடம் காணப்பட்ட எளிமை, மற்றவர்களுடன் பழகும் விதம் என பலவும் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.
குறிப்பாக, ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிய வேண்டும் என விரும்பும் பெண்களுக்கு சித்ரா ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தார். இப்படி ஏகப்பட்ட பாசிட்டிவ் எண்ணம் கொண்ட சித்ரா, சில தனிப்பட்ட காரணங்களுக்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு தனது வாழ்க்கையை சோகத்துடன் முடித்துக் கொண்டார். இவர் மறைவு இன்று வரையும் தமிழ் சின்னத்திரை உலகிற்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது. இந்த நிலையில் மே 2ம் தேதியான இன்று, நடிகை சித்ராவின் 30வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அன்னதானங்களை செய்து அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில், விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலங்களான நடிகை சுஜிதா, கம்பம் மீனா ஆகியோரும் சித்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி அவரை மிஸ் செய்வதாக சமூக வலைதளங்களில் உருக்கமாக பதிவிட்டுள்ளனர். அதே போல விஜய் டிவியின் காமெடி நட்சத்திரம் பாலாவும் நடிகை சித்ராவை நினைவு கூறும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டு தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இது போன்ற பதிவுகள் நடிகை சித்ரா எவ்விதமாக வாழ்ந்தார் என்பதை நினைவு கூறுவது போல இருப்பதாக ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.