“பாக்கியலட்சுமி” சீரியலில் விமர்சையாக நடக்கும் கோபி & ராதிகா திருமணம் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியை நம்பி பாக்கியா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட அடுத்ததாக கோபி மற்றும் ராதிகாவின் திருமண வைபோகம் நடைபெற இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி குடும்பத்தை ஏமாற்றி ராதிகாவை திருமணம் செய்ய இருக்கிறார். இது பற்றி தெரிந்த ராமமூர்த்தி படியில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு பக்கவாதம் ஏற்பட்டு இருக்கிறார். அதனால் அவரால் பேச முடியாமல் போகிறது. அதனால் கோபிக்கு ரொம்ப வசதியாக இருக்கிறது. பாக்கியா மாமனாரை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். மருத்துவம் முதல் அவருக்கு இயற்கை உபாதைகளை எடுப்பது வரை பாக்கியாவே எல்லா வேலைகளையும் செய்கிறார்.
விஜய் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘பாரதி கண்ணம்மா’ வில்லன் நடிகர் – உற்சாகத்தில் ரசிகர்கள்!
அதனால் ஈஸ்வரியும் தாத்தாவும் பாக்கியா மீது பாசமாக இருக்கின்றனர். பாக்கியா தாத்தாவை கவனித்துக் கொள்வதால் பிசினஸ் பண்ண முடியாமல் இருக்கிறது. அதனால் பாக்கியாவிற்கு பணம் தேவைப்படுகிறது. கோபியிடம் கேட்டால் என் அப்பா தான் உனக்கு சொத்து எழுதி வைத்தாரே என சொல்கிறார். அதனால் வருத்தப்பட்டு பாக்கியா வந்துவிட கோபி மனம் வருத்தப்பட்டு பணம் கொடுக்கிறார். இதற்கிடையே கோபி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க முடியாமல் இருக்கிறார்.
விஜய் டிவி “ராஜா ராணி 2” ஆல்யா மானசாவின் ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
ஆனால் பாக்கியா கோபி மீது உள்ள நம்பிக்கையால் அந்த பத்திரத்தை படித்து பார்க்காமல் கையெழுத்து போடுகிறார். அதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார். அடுத்ததாக கோபி ராதிகாவின் திருமண வைபோகம் நடைபெற இருக்கிறது. அது குறித்த எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால் உண்மையாக அப்படி நடக்க வாய்ப்பில்லை தாத்தா எழுந்து உண்மையை சொல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.