Infosys நிறுவனத்தில் சுமார் 400 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் – முழு விவரம் இதோ!
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் தனது கிளை அலுவலகத்தில் சுமார் 400 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
வேலை வாய்ப்புகள்
சமீப காலமாக இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான TCS, இன்போசிஸ், விப்ரோ ஆகியவை புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் நிதியாண்டிற்குள் சுமார் 1 லட்சம் புதியவர்களை பணியமர்த்த திட்டமிட்ட TCS நிறுவனம் இதில் 75%க்கும் மேற்பட்ட ஆட்சேர்ப்புகளை சாதனை நிகழ்த்தி இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இன்போசிஸ் லிமிடெட் நிறுவனத்தின் வணிக செயல்முறை மேலாண்மை பிரிவு (BPM), 400 திறமையான வாடிக்கையாளர் சேவை ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை – அரசு அதிரடி உத்தரவு!
இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு சர்வதேச வாடிக்கையாளர்களின் போர்ட்போலியோ மற்றும் ஒட்டுமொத்த வணிக வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இந்த பணியமர்த்தல் ஆனது மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவில் அதன் விரிவாக்கத்தை மேம்படுத்தவும், நிறுவனம் செயல்படும் சமூகங்களை மேம்படுத்துவதிலும் மேற்கொள்ளப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
தற்போது, கோஸ்டாரிகாவில் உள்ள Infosys BPM பிரிவு, விற்பனை மற்றும் பூர்த்தி, ஆதாரம் மற்றும் கொள்முதல், வாடிக்கையாளர் சேவைகள், சட்ட செயல்முறை மேலாண்மை, மனித வள அவுட்சோர்சிங் மற்றும் ரோபோடிக் செயல்முறை ஆட்டோமேஷன் (RPA) உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செயல்படுத்தி வருகிறது. இதில் ஏற்கனவே 300 பணியாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில், மேலும் 400 புதிய பணியாளர்கள் இதனுடன் இணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது இந்த நிறுவனத்தில் இணையும் புதிய பணியாளர்கள் வாடிக்கையாளர் சேவையில் முதன்மையான கவனம் செலுத்தி இந்த சேவை வரிகளில் பணியை மேற்கொள்வார்கள் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது.