தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை – அரசு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் 19 ம் தேதி தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நாட்கள் மதுபான கடைகள் திறக்க தடை என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு மதுபிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அதிரடி உத்தரவு:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதி(சனிக்கிழமை) நடைபெறும் என்று கடந்த மாதம் 26ம் தேதி அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு 19ம் தேதி பொதுவிடுமுறை மற்றும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் – தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு!
இந்த நிலையில் 19ம் தேதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் வரை உள்ள பகுதிகளில் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகள் மற்றும் உணவு விடுதியுடன் கூடிய மதுபான கூடங்கள் செயல்பட தடை என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் தினத்தன்று தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் வரை உள்ள பகுதிகளில் உள்ள 73 டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகள் மற்றும் உணவு விடுதியுடன் கூடிய 34 மதுபான கடைகள் செயல்பட தடை மற்றும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22-ஆம் தேதியும் மதுபான கடைகள் செயல்பட தடை என்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.