விஜய் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘பாரதி கண்ணம்மா’ வில்லன் நடிகர் – உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் துர்கா வேடத்தில் நடித்து வந்த நடிகர் தற்போது சீரியலில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இது பற்றி தெரிந்த ரசிகர்கள் தற்போது அதிக உற்சாகம் அடைந்துள்ளனர்.
சீரியலில் ரீஎன்ட்ரி:
பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகி கண்ணம்மாவிற்கு தொல்லைகளை கொடுப்பதற்காக வில்லி வெண்பா செய்த அட்டுழியங்கள் கொஞ்ச, நஞ்சமல்ல. அப்படி ஒரு முறை கண்ணம்மா வீட்டிற்கு, பாரதி கண்ணம்மாவை பற்றி தவறாக நினைக்கும் படி அனுப்பிய கைக்கூலி தான் துர்கா. வீட்டின் டிரைவராக அனுப்பிய துர்கா ஆரம்பத்தில் வெண்பாவின் பேச்சை கேட்டு நடந்தாலும், பின்னர் கண்ணம்மாவின் குணத்தை முழுமையாக அறிந்து கண்ணம்மாவிற்கு துரோகம் செய்ய மனமில்லாமல் அந்த வேலையை விட்டு விலகிவிடுவான்.
விஜய் டிவி “ராஜா ராணி 2” ஆல்யா மானசாவின் ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
ஒரு கட்டத்தில் வெண்பாவின் தொல்லை தாங்க முடியாமல் இந்த வேலையை நிறுத்தி விடுமாறு வெண்பாவின் கெஞ்சுவான். ஆனால் வெண்பா கேட்காமல் தொடர்ந்து கண்ணம்மாவிற்கு தொல்லைகளை செய்து வந்தாள். பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போதைக்கு அவர் தொடர்பான காட்சிகள் வருவதில்லை. ஆனால் கண்ணம்மாவின் பிறந்த நாள் விழா டிவிஸ்ட் காட்சிகளில் துர்கா வந்து வெண்பாவை பற்றிய உண்மைகளை அனைவரிடமும் சொல்வது போலவும் காட்சிகள் வரலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தற்போது விஜய் டிவியின் மற்றொரு சீரியலான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் புது வேடத்தில் பிரவீன் ராஜ் தேவசகாயம் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் இதற்கு முன்னதாக நடித்த ஈரமான ரோஜாவே சீரியலிலும் வில்லன் வேடத்தில் தான் நடித்தார். பாரதி கண்ணம்மாவிலும் வில்லனாக தான் முதலில் வந்தார் என்பதால் இந்த சீரியலில் நடிகர் பிரவீன் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து உள்ளனர்.