பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி? 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி? 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியாவின் கடை திறப்பு விழா இன்று 3 மணி நேர சிறப்பு எபிசோடாக வெளியாக இருக்கும் நிலையில் இத்தொடரில் புதிய திருப்பங்கள் நடைபெற இருக்கிறது. இது தொடர்பான ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல்

ஒவ்வொரு இல்லத்தரசிகளிடமும் மிகுந்த வரவேற்புகளை பெற்றிருக்கும் விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தற்போது 400 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் வழக்கமான கதைகளை போல அல்லாமல், குடும்பத்துக்காகவே வாழும் ஒரு அப்பாவி பெண், முற்போக்கு சிந்தனையுடைய அம்மா, விவாகரத்தான பெண்ணின் எதிர்காலம், கணவனை இழந்த பெண் என சமுதாயத்தால் ஒதுக்கப்படும் சில பெண்களின் கதைகளை மையமாக வைத்து நகர்ந்து வருகிறது.

குக் வித் கோமாளி’ சிவாங்கி கையை பிடித்த ரசிகர்கள், அடுத்து நடந்த சம்பவம் – வைரலாகும் வீடியோ!

இந்த கதையில் மிகவும் முக்கியமான, அதே நேரத்தில் ஸ்வாரசியமான ஒரு கதாப்பாத்திரம் தான் பாக்கியாவின் கணவராக வரும் கோபி. இந்த கதாப்பாத்திரத்தை பொருத்தளவு, திருமண வயதில் இருக்கும் 3 பிள்ளைகளுக்கு அப்பாவான கோபி தனது காதலியின் பின்னால் சுற்றி வந்து கொண்டிருக்கிறார். இத்தொடரில் தனது குடும்பத்தாருக்கு தெரியாமல் ராதிகா என்ற பெண்ணை காதலித்து வரும் கோபி அவரது அப்பாவிடம் மாட்டி கொள்கிறார்.

பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு ராதிகாவை பார்க்க மாட்டேன் என அப்பாவிடம் இவர் சத்தியம் செய்து கொடுக்க, ராதிகாவுக்கு விபத்து நடைபெற்றது தெரிய வந்ததும் முதல் ஆளாக அங்கு போய் நிற்கிறார். தவிர ராதிகாவுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக பெங்களூருக்கு போவதாக வீட்டில் பொய் சொல்லி விட்டு மருத்துவமனையில் தங்குகிறார் கோபி. இப்போது ராதிகாவை பார்க்க மருத்துவமனைக்கு வரும் பாக்கியாவிடம், அவர் கையும் களவுமாக மாட்டி கொள்கிறார்.

நண்பனை பார்க்க பெங்களூருவில் இருந்து விமானத்தில் வந்ததாக பாக்கியாவிடம் பொய் சொல்லி சமாளிக்கும் கோபியின் கார் அவரை காட்டி கொடுத்து விடுகிறது. இந்த விஷயத்தில் பாக்கியா அப் செட் ஆக, இது குறித்து அவர் எழிலிடம் பேசுகிறார். இப்போது எழிலுக்கு, கோபியை ஒரு பெண்ணுடன் பார்த்த பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகிறது. இருந்தாலும் பாக்கியாவின் கடை திறப்பு விழாவில் அனைவரும் பிசியாக, சிறப்பு விருந்தினராக வரும் ரஞ்சித் மற்றும் ப்ரியா ராமனை ராதிகாவின் அலுவலகத்திற்கு அனுப்ப திட்டமிடுகிறார் கோபி.

வீட்டில் இருந்தே வேலை செய்யும் (WFH) ஊழியர்கள் கவனத்திற்கு – ஊதியத்தில் மாற்றம்! மத்திய அமைச்சகம் தகவல்!

ஆனால் கோபியை ஆச்சரியப்படுத்தும் விதமாக ரஞ்சித் மற்றும் ப்ரியா ராமன் இருவரும் பாக்கியாவின் வீட்டிற்கு வந்து விழாவை சிறப்பிக்கிறார்கள். இப்போது அலுவலகத்திற்கு பதில் சொல்ல முடியாமல் கோபியிடம் கோபித்து கொள்கிறார் ராதிகா. இந்தவாறு வெளியாக இருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் சிறப்பு எபிசோடுக்கான கதைக்களம் கோபி, பாக்கியாவிடம் மாட்டுவாரா என்ற பல்வேறு திருப்பங்களுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி வெளியாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!