வீட்டில் இருந்தே வேலை செய்யும் (WFH) ஊழியர்கள் கவனத்திற்கு – ஊதியத்தில் மாற்றம்! மத்திய அமைச்சகம் தகவல்!
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலானோர் இன்னும் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு பணிபுரிபவர்களுக்கு ஊதியத்தில் மாறுதல் கொண்டுவர மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊதியத்தில் மாறுதல்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவியது. இதனால் பொதுமுடக்கம் அமலபடுத்தப்பட்டது. இத்தகைய பொதுமுடக்கத்தால் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்தே தங்களது பணிகளை செய்து வந்தனர். தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து சற்று இயல்பு நிலை திரும்பியுள்ளது. எனினும் கடந்த சில தினங்களாக உருமாறிய கொரோனா வகையான கண்டுபிடிக்கப்பட்ட ஓமைக்ரான் தொற்று தமிழகத்தில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு!
இந்நிலையில் இன்னும் சிலர் தங்களது பணிகளை வீட்டிலிருந்தே செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு வீட்டிலிருந்து பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஊதியத்தில் சில மாறுதல்கள் கொண்டுவர மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்ய விருப்பமுள்ள ஊழியர்கள் சிலர் மெட்ரோ நகரங்களைவிட்டு வெளியேறி இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களுக்கு சென்று வசிக்கத் தொடங்கி உள்ளனர்.
நாடு முழுவதும் 2022 ஜனவரி மாத விடுமுறை தினங்கள் எத்தனை? முழு பட்டியல் இதோ!
அதனால் அவர்களுக்கு க்ளைம் செய்யப்படும் பணம், அலவன்ஸ் பணம், ப்ரொஃபெஷனல் வரி போன்றவற்றில் சில மாறுதல்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் போது ஆகும் இதர செலவுகளை அதாவது மின்சாரம், இணைய சேவை உள்ளிட்டவைளை ஈடுகட்டுவது தொடர்பான உத்தரவுகளும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் மாறுதல் ஏற்படும் என்றும், வரிச்சுமை குறைக்க வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.