ஜெனி வீட்டிற்கு செல்ல வேண்டும் என பிடிவாதமாக இருக்கும் பாக்கியா, கோபியை தடுக்கும் ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ஜெனி வீட்டிற்கு செல்ல வேண்டும் என பிடிவாதமாக இருக்கும் பாக்கியா, கோபியை தடுக்கும் ஈஸ்வரி - இன்றைய
ஜெனி வீட்டிற்கு செல்ல வேண்டும் என பிடிவாதமாக இருக்கும் பாக்கியா, கோபியை தடுக்கும் ஈஸ்வரி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ஜெனி வீட்டிற்கு செல்ல வேண்டும் என பிடிவாதமாக இருக்கும் பாக்கியா, கோபியை தடுக்கும் ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், செழியன் வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதாக எழில் சொல்ல ஈஸ்வரி கோவமாக திட்டுகிறார். பாக்கியா ஜெனி வீட்டிற்கு போவோம் என சொல்ல அதெல்லாம் வேண்டாம் என ஈஸ்வரி சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் செழியன் வெளிநாடு செல்ல திட்டமிடுவதாக சொல்கிறார். அப்போது ஈஸ்வரி ஜெனி செய்த தப்பிற்கு எல்லாம் அனுபவிக்கட்டும் என செல்கிறார். பாக்கியா கோபியிடம் ஜெனி வீட்டிற்கு போவோம் என சொல்ல ஈஸ்வரி நான் வேண்டாம் என சொல்லிக் கொண்டே இருக்கிறேன் ஆனால் நீ கேட்காமல் இருக்கிறாய் என சொல்கிறார். ஜெனி மீது தான் எல்லாம் தப்பு தான் அதற்காக நீ எதற்கு ஜெனி வீட்டிற்கு செல்ல வேண்டும் என ஈஸ்வரி கேட்கிறார். அதற்குள் செழியன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுவான் என பாக்கியா சொல்ல, அவன் போகட்டும் என ஈஸ்வரி சொல்கிறார்.

மகாபலிபுரம் செல்ல திட்டமிடும் இரண்டு குடும்பத்தினர், சரஸ்வதி உடன் செல்ல சம்மதம் சொன்ன அப்பா – இன்றைய “மெகா சங்கமம்” எபிசோட்!

செழியன் சந்தோசமாக போகவில்லை என எழில் சொல்ல, அதெல்லாம் அவன் சரியாகிவிடுவான் என ஈஸ்வரி சொல்கிறார். செழியன் இங்கே சந்தோசமாக இல்லை என எழில் சொல்ல, திருமணம் செய்ய வேண்டாம் என சொன்னேன் கேட்டால் தான என ஈஸ்வரி சொல்கிறார். ஜெனி அப்பா செய்தது தவறு என ஈஸ்வரி சொல்ல, பாக்கியா நேரில் சென்றால் தான் சரியாக வரும் என சொல்கிறார். கோபி அம்மாவிடம் சத்தமாக பேசாதே என சொல்ல, ஈஸ்வரி நான் போக கூடாது என சொல்கிறேன் என சொல்கிறார்.

உனக்கு செழியனை விட ஜெனி மீது தான் பாசம் அதிகம் என சொல்கிறார். நீங்க ஜெனி வீட்டிற்கு வர முடியுமா முடியாதா என கேட்க, ஈஸ்வரி எனக்கு என்ன மரியாதை என கேட்கிறார். எனக்கு எல்லாரையும் விட என் பசங்க வாழ்க்கை தான் முக்கியம் என பாக்கியா சொல்கிறார். என்னை அப்படி பேசிட்டாங்க இப்படி பேசிட்டாங்க என நினைத்து என் புள்ளைங்க வாழ்க்கையை கெடுக்க முடியாது. நம்ம புள்ளைகளுக்காக இறங்கி வந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என பாக்கியா சொல்கிறார். நான் தான் செழியனின் கஷ்டத்திற்கு காரணம் என சொல்கிறீர்கள் அல்லவா அப்போ நான் சென்று இந்த பிரச்சனையை சரி செய்கிறேன் என சொல்கிறார்.

ஈஸ்வரி கோவமாக கிளம்ப, கோபி என்ன பாக்கியா அம்மாவை கோவப்படுத்துகிறாய் என கேட்கிறார். பாக்கியா ஜெனி வீட்டிற்கு போகணும் இந்த தீபாவளியை ஜெனி செழியனுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என பாக்கியா உறுதியாக சொல்கிறார். எழில் அமிர்தாவை பார்க்க அமிர்தா வீட்டிற்கு செல்கிறார். அமிர்தா அம்மா குழந்தையை கூட்டிக் கொண்டு செல்வதாக சொல்கிறார் ஆனால் எங்களுக்கு பிரிய இஷ்டம் இல்லை என அமிர்தா அத்தை மாமா சொல்கிறார். நீங்க பயப்படாமல் ஊருக்கு கிளம்புங்கள் நிலாவை நாங்க பார்த்துக் கொல்கிறோம் என எழில் சொல்லி வாங்கி கொண்டு வந்து பொம்மையை கொடுக்கிறார். பாப்பா எழில் உடன் நன்றாக விளையாடுகிறார்.

பிரசவ வலியால் துடிக்கும் அஞ்சலி, எல்லா கோவில்களிலும் தேடும் அகில் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

பின் எழில் அமிர்தா வீட்டிற்கு சென்றதை தனது நண்பரிடம் சொல்கிறார். உனக்கு என்ன வயது 23 வயதில் காதலிக்க வேண்டும் ஆனால் அப்பா ஆக ஆசைப்பட கூடாது என சொல்கிறார். இந்த வயதில் உனக்கு தேவை இல்லை என சதீஸ் சொல்கிறார். உனக்கு எதற்கு தேவை இல்லாத வேலை என சதீஸ் சொல்ல, நான் எடுத்த எல்லா முடிவும் சரியாக தான் இருக்கும் என எழில் சொல்கிறார். அமிர்தா ரொம்ப தைரியமான பொண்ணு என சொல்கிறார். படம் போல நினைத்துக் கொண்டிருக்க அமிர்தாவை விட உன் வேலையை நினைத்தால் தான் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என சதீஸ் சொல்கிறார்.

பாக்கியா வந்து கோபியிடம் இன்னும் கிளம்பவில்லையா என கேட்க, கோபி இப்போதே போக வேண்டுமா என கேட்கிறார். ஏற்கனவே ஜெனி வீட்டிற்கு போவோம் என சொன்னேன் நீங்க தான் கேட்கவில்லை. உங்களுக்கு பசங்க வாழ்க்கை மீது அக்கறை இருக்கா இல்லையா என கேட்கிறார். செழியன் மிகவும் சோகமாக இருக்கிறான். அவன் பிரச்சனையை அவனே சரி செய்யலாம் என விட்டோம் ஆனால் அது சரியாகவில்லை. செழியன் மீதும் தப்பு இருக்கிறது. அது அத்தைக்கு தெரியாது ஆனால் உங்களுக்கு தெரியும் அல்லவா என கேட்கிறார். இனியாவிற்கு இப்படி நடந்தால் நம்ம இப்படி தான பேசிருப்போம் அது போல தான் ஜெனி அப்பா அம்மா பேசினார்கள் என சொல்ல, சரி நான் கிளம்புகிறேன் என சொல்கிறார்.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – நவ.21ம் தேதி மெகா முகாம்!

செழியனிடம் சந்தோசமாக இரு, எல்லாரிடமும் நன்றாக பேசு, என சொல்லிக் கொண்டிருக்க, கோபி கிளம்பி வந்து ஜெனி வீட்டிற்கு போவதாக சொல்கிறார். இவ்வளவு நான் சொல்லியும் கேட்காமல் இருக்கிறாய். இவள் வந்து உன்னிடம் பேசினாளா என கேட்கிறார். பிடிவாதம் பிடிக்காதீங்க அத்தை செழியன் வாழ்க்கை தான் முக்கியம் என ஈஸ்வரி சொல்கிறார். போயிட்டு வந்துருவோம் என சொல்ல, போங்க போய் அவமானம் பட்டு வாருங்கள் என சொல்கிறார். எப்படியோ போங்க என கோபி சொல்ல, என் பேச்சிற்கு இந்த வீட்டில் மரியாதை இல்லை என கிளம்புகிறார். செழியன் கவலைப்படாமல் இரு என பாக்கியா சொல்ல, ஜெனியை கூட்டிக் கொண்டு வாருங்கள் என செழியன் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!