பிரசவ வலியால் துடிக்கும் அஞ்சலி, எல்லா கோவில்களிலும் தேடும் அகில் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
பிரசவ வலியால் துடிக்கும் அஞ்சலி, எல்லா கோவில்களிலும் தேடும் அகில் - இன்றைய
பிரசவ வலியால் துடிக்கும் அஞ்சலி, எல்லா கோவில்களிலும் தேடும் அகில் - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
பிரசவ வலியால் துடிக்கும் அஞ்சலி, எல்லா கோவில்களிலும் தேடும் அகில் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மறுப்பக்கம் ஹேமாவும் லட்சுமியிடம் இணைந்து விளையாடுகின்றனர்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. கண்ணம்மா தரப்பில் யார் வந்திருக்கா என நீதிபதி கேட்க என் அப்பா வந்திருக்கார் என கண்ணம்மா சொல்கிறார். கண்ணம்மா அப்பா வர உங்களுக்கு எத்தனை பசங்க என கேட்கிறார் நீதிபதி. எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருவரையும் ஒரே வீட்டில் தான் கொடுத்திருக்கேன். இது தான் என்னுடைய மூத்த பொண்ணு கண்ணம்மா இவளை டாக்டர் மாப்பிள்ளை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இரண்டாவது மகளை மாப்பிள்ளையின் தம்பிக்கு திருமணம் செய்திருக்கேன் என சொல்கிறார்.

‘கோழியில் இருந்து தான் முட்டை வந்தது’ – பல வருட புதிருக்கு கிடைத்த விடை! விஞ்ஞானிகளின் விளக்கம்!

சிறு வயதில் கண்ணம்மாவின் அம்மா இறந்துவிட்டார். கண்ணம்மாவை கஷ்டப்பட்டு வளர்த்தேன் ஆனால் அவள் வாழ்க்கை இப்படி முடிந்துவிடும் என நினைக்கவில்லை என சொல்கிறார். இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்யவில்லையா என கேட்க என்னால் முடியவில்லை. சாமந்தி அம்மா எவ்வளவோ முயற்சி செய்தார்கள் அவரால் முடியாதது என்னால் எப்படி முடியும் என சொல்கிறார். உடனே நீதிபதி பாரதியிடம் உங்க அம்மா உங்க மாமா எல்லாரும் நீங்க சேர்ந்து வாழ வேண்டும் என நினைக்கிறார்கள் ஆனால் நீங்க ஏன் விவாகரத்து கேட்க இருக்கீங்க என கேட்கிறார். கண்ணம்மா நீங்க காதலித்து கல்யாணம் செய்த பெண் தான என நீதிபதி கேட்க இல்லை என பாரதி சொல்கிறார்.

நான் காதலித்த கண்ணம்மா இது இல்லை அவளுக்கு பொய் பேச தெரியாது நாங்க ரொம்ப தூரம் பிரிந்து சென்றுவிட்டோம் இனிமேல் சேர்ந்து வாழ முடியாது. எனக்கு விவாகரத்து வேண்டும் என பாரதி சொல்கிறார். நீதிபதி கண்ணம்மாவிடம் உங்க அத்தை தான் வீட்டிற்கு கூப்பிட்டார்கள் ஆனால் நீங்க ஏன் போகவில்லை என நீதிபதி கேட்கிறார். கூப்பிட வேண்டியவர்கள் கூப்பிட வேண்டும். ஒரு இடத்தில் இருந்து சுயமரியாதையுடன் நான் கிளம்பினேன் மீண்டும் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என என்னால் சொல்ல முடியாது என சொல்கிறார்.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – நவ.21ம் தேதி மெகா முகாம்!

அதை கேட்டதும் நீதிபதி பொதுவாக விவாகரத்து கேஸ் என்றால் ஒருவரை ஒருவர் சண்டை போடுவார்கள் ஆனால் இங்கே அப்படி இல்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லை என தோன்றுவதாக சொல்கிறார். இந்த கேஸ் தீர்ப்பு சிறிது நேரத்தில் வழங்கப்படும் என நீதிபதி சொல்கிறார். மறுபக்கம் லட்சுமி ஹேமா சாப்பிட அமர ஹேமாவிற்கு லட்சுமி சாப்பாட்டை திறந்து கொடுக்கிறார். அப்போது புதினா சாதம் இருக்கிறது. ஹேமா எனக்கு பிடிக்காது என சொல்ல, லட்சுமி அவளுடைய சாப்பாடை கொடுக்கிறார். லக்ஷ்மியும் ஹேமாவும் நண்பர்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இருவர் வீட்டிலும் தனியாக இருக்கோம் என ஹேமா பேச, உடனே இருவரும் ஒரே வீட்டில் பிறந்திருக்கலாம் என ஹேமா சொல்கிறார். நானும் அதான் சொல்ல வந்தேன் என லட்சுமி சொல்ல, சின்ன பசங்களாக இருப்பதால் நம்ம பேச்சை கேட்கவே இல்லை என ஹேமா சொல்கிறார். அதற்கு லட்சுமி சீக்கிரமாக நாம் பெரியவர்களாக மாறி ஊர் சுற்றலாம் என சொல்கிறார். பின் அகில் வீட்டிற்கு வர அஞ்சலியை காணவில்லை என தேடுகிறார். அஞ்சலி வீட்டில் இல்லாததை பார்த்து எல்லா இடங்களிலும் தேடுகிறார். அப்போது மல்லிகா வர அஞ்சலி எங்கே என கேட்கிறார். கோவிலுக்கு போறேன் என சொல்லி போனார்கள் என போனதாக சொல்கிறார்.

போன் வேற சுவிட்ச் ஆப்பில் இருக்கு என அகில் கோவிலுக்கு போக தேடுகிறார். அஞ்சலிக்கு அப்போது வயிறு வலி வருகிறது. ரவுடிகள் மூஞ்சியில் இருக்கும் துணியை எடுத்து விடுகிறார்கள். அஞ்சலிக்கு வயிறு வலி வர அவர் வலியால் துடிக்கிறார். அகில் அஞ்சலியை எல்லா பக்கத்திலும் தேடி அலைகிறார். எல்லா கோவிலிலும் அஞ்சலி இல்லாததால் அம்மாவிற்கு போன் செய்து பார்க்கிறார். ஆனால் சௌந்தர்யா போனை எடுக்காமல் இருக்கிறார். மறுபக்கம் அஞ்சலி வலியால் துடிக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!