தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – நவ.21ம் தேதி மெகா முகாம்!
தமிழகத்தில் இன்று 9வது தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து வரும் 21.11.2021 அன்று 10வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி முகாம்:
கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடியது. இந்நிலையில் கொரோனா 3ம் அலை பரவும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். அதன் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் ஆக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி முகாமானது மது மற்றும் மாமிச பிரியர்களுக்காக சனிக்கிழமை நடத்தப்பட்டு வந்தது. இது வரி 8 தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் 9 வது முகமானது இன்று நடைபெற்றது.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நவ.19ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!
தமிழ்நாட்டில் 26000 இடங்களில் 9வது கோவிட் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. முதல் 4 முதல் 5 மணி நேரத்திற்கு ஒரு இடத்திலும், பிற்பகல் முதல் வேறு இடங்கள் என ஒரே நாளில் மொத்தம் 50,000 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று காலை வரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 74% நபர்கள் என்றும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 36% நபர்கள் எனவும் உயர்ந்துள்ளது.
பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு – அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தற்பொழுது 1 கோடியே 31 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் வாரத்திற்கு இரண்டு மெகா தடுப்பூசிகள் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே வாரந்தோறும் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் இந்தத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 21.11.2021 அன்று 10வது மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.