தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நவ.19ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை சென்னை அருகே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு – அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
சென்னையில் கனமழையின் காரணமாக சாலைகள் முழுவதும் நீரினால் மூடப்பட்டு காட்சியளிக்கிறது. மேலும் வீடுகள் தண்ணீரில் மூழ்கும் அவல நிலை உருவாகியுள்ளது. அதேசமயம் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
தொடர் மழையின் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு வருகின்றனர்.சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.