மகாபலிபுரம் செல்ல திட்டமிடும் இரண்டு குடும்பத்தினர், சரஸ்வதி உடன் செல்ல சம்மதம் சொன்ன அப்பா – இன்றைய “மெகா சங்கமம்” எபிசோட்!

0
மகாபலிபுரம் செல்ல திட்டமிடும் இரண்டு குடும்பத்தினர், சரஸ்வதி உடன் செல்ல சம்மதம் சொன்ன அப்பா - இன்றைய
மகாபலிபுரம் செல்ல திட்டமிடும் இரண்டு குடும்பத்தினர், சரஸ்வதி உடன் செல்ல சம்மதம் சொன்ன அப்பா - இன்றைய "மெகா சங்கமம்" எபிசோட்!
மகாபலிபுரம் செல்ல திட்டமிடும் இரண்டு குடும்பத்தினர், சரஸ்வதி உடன் செல்ல சம்மதம் சொன்ன அப்பா – இன்றைய “மெகா சங்கமம்” எபிசோட்!

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மெகா சங்கமம் சீரியலில், தனம் மூர்த்தி சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது சரஸ்வதியின் அப்பாவை பார்க்கிறார். பின் மகாபலிபுரம் செல்ல இருப்பதாக சரஸ்வதியை தமிழ் வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள்.

மெகா சங்கமம்:

இன்று மெகா சங்கமத்தில், மூர்த்தியும் தனமும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இப்போது தான் கை கால் நன்றாக இருப்பதாக மூர்த்தி சொல்கிறார். வண்டியில் வந்ததால் கால் எல்லாம் புடிச்சது போல இருந்தது என சொல்கிறார். எனக்கு கை கால் வலி என்றதும் தம்பிகள் எப்படி துடித்து போனார்கள் என கேட்கிறார். திருமணம் முடிந்து இப்படி நடந்து கொள்வது எல்லாம் பெரிய விஷயம் தான் என சொல்கிறார். ஆனால் அவர்களின் மனைவி முன்னாள் சொன்னது தான் பெரிய விஷயம். முல்லை பேசியது எல்லாம் பெரியமனுஷி போல இருந்தது என சொல்கிறார்.

பிரசவ வலியால் துடிக்கும் அஞ்சலி, எல்லா கோவில்களிலும் தேடும் அகில் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

உடனே தனம் சின்னவர்கள் எல்லாம் பெரியவர்கள் போல நடந்து கொள்கிறார்கள். ஆனால் பெரியவர்கள் சின்னவர்கள் செய்த தவறை மன்னிக்காமல் இருக்கீங்க என சொல்ல, நீ கண்ணன் பற்றி பேசுவது புரிகிறது என சொல்கிறார். ஊருக்கு போன் செய்து என்ன நடக்கிறது என கேட்க மூர்த்தி அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். அப்போது சரஸ்வதி அப்பா அங்கே செல்ல, சொக்கலிங்கம் அண்ணன் தான அது என மூர்த்தி பார்க்கிறார். உடனே சென்று அவர் பேச சரஸ்வதி அப்பா நலம் விசாரிக்கிறார். பின் வீட்டிற்கு அவர்களை அழைத்து சென்று பேசிக் கொண்டிருக்கிறார்.

பசங்களிடம் அறிமுகம் செய்து வைத்துவிட்டு இவங்க நம்ம ஊர்காரர்கள் தான் என சரஸ்வதி அப்பா சொல்கிறார். மறுபக்கம் சாப்பிட கதிர் முல்லையை சொல்ல, அண்ணன் அண்ணி வந்ததும் சாப்பிடலாம் என இருப்பதாக சொல்கிறார்கள். இன்று மகாபலிபுரம் போகலாம் என இருப்பதாக சொல்கிறார்கள். உடனே கதிர் நீங்களும் எங்களுடன் சேர்ந்து வாங்க என கூப்பிட தமிழ் அம்மா வரோம் என சொல்கிறார். கோதை கார்த்திக்கிடம் வசுக்கு போன் செய்து மகாபலிபுரம் போகலாம் என வர சொல்கிறார். பின் தமிழ் நீயும் மகாபலிபுரம் வா என கூப்பிடுகிறார்.

சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி சனிக்கிழமையும் இருக்கு! மிஸ் பண்ணாதீங்க!

ஆனால் தமிழ் வரமுடியாது என சொல்கிறார். கார்த்திக் வசுவிற்கு போன் செய்கிறார். உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது என சொல்ல, என்னது என வசு கேட்கிறார். நீ இங்கே வர போகிறாய் நம்ம இருவரும் சேர்ந்து மஹாபலிபுரம் போக போகிறோம் என சொல்கிறார். நீ உடனே கிளம்பி வா என சொல்கிறார். வசு அம்மாவிடம் சென்று கார்த்திக் போன் செய்து மகாபலிபுரம் போகலாம் என சொன்னதாக சொல்கிறார். ஆனால் கோதை அதற்கு ஒப்புக் கொள்ளமாட்டார் என சொல்ல, இந்த ஏற்பாடு செய்ததே அத்தை தானாம் என சொல்கிறார். பின் சந்திரலேகா ஜோசியர் சொன்னதை நினைத்து பார்க்கிறார். 2 3 நாள் அங்கையே இரு என அனுமதி வழங்குகிறார்.

பின் சந்திரலேகா உன் மூத்த மகனுக்காக என் மகளையும் மருமகனையும் பிரிந்து வைத்தாய் அல்லவா இன்று பாரு உன் ஹோமம் வீணாகிவிடும் என நினைத்து கொள்கிறார். பின் மூர்த்தி சரஸ்வதி வீட்டில் இருந்து கிளம்ப, மூர்த்தி இத்தனை நாட்கள் கழித்து வெளி ஊருக்கு வந்தோம் ஆனால் இப்படி நடந்துவிட்டது என சொல்கிறார். அப்போது உங்களை போல நல்ல குடும்பம் எங்களுக்கு உதவி செய்தார்கள் என சொல்கிறார். எங்களுக்கு தான் தேவை இல்லாமல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது என சொல்கிறார். அப்போ இங்கே வந்துருங்க என சொக்கலிங்கம் சொல்கிறார்.

மூர்த்தி இன்று மகாபலிபுரம் போகிறோம் என நீங்களும் வாங்க என சொல்ல, எனக்கு வேலை இருப்பதாக சொக்கலிங்கம் சொல்கிறார். உடனே பாட்டி நம்ம சரஸ்வதி இருக்காளே அவளுக்கு எல்லா இடமும் தெரியும் கூடவே இருந்து எல்லாம் பார்த்துக் கொள்வாள் என சொல்ல, சொக்கலிங்கம் சரி என சொல்கிறார். மறுபக்கம் ஊரில் கண்ணன் ரோட்டில் வந்து கொண்டிருக்க கண்ணனிடம் ஒருவர் கடை நடத்துவது எல்லாம் பெரியவிஷயம் என சொல்கிறார். கண்ணனிற்கு என்ன சொல்கிறார் என தெரியாமல் இருக்க, இன்னொருவர் மகாலக்ஷ்மி கடையில் பாதி விலைக்கு பொருள்கள் கொடுப்பதாக சொல்கிறார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவ.30 வரை அமல் – அரசு அறிவிப்பு!

பின் சரஸ்வதி மூர்த்தியுடன் வர சந்தோசமாக கிளம்புகிறார். அப்போது நீ என்ன படிக்கிறாய் என தனம் கேட்கிறார். அதை கேட்டு சரஸ்வதி தயக்கமாக இருக்க நான் 12 ஆம் வகுப்பு பெயில் ஆயிட்டேன் என சொல்கிறார். அதை கேட்டு தனம் மற்றவர்கள் இருந்தால் எங்களிடம் பொய் சொல்லிருக்கலாம். இவருடைய இரண்டாவது தம்பி கதிர் இருக்கானே அவனும் அப்படி தான் எங்களுக்கு தெரியாமல் 12 ஆம் வகுப்பு படித்து பாஸ் ஆகி இருக்கிறான் என சொல்கிறார். சரஸ்வதி தமிழ் வீட்டிற்கு வர தனம் உள்ளே வர சொல்கிறார். கோதை சரஸ்வதியை பார்த்து சந்தோசமாக இருக்க, சரஸ்வதி கோதையை பார்த்து அத்தை என ஓடி சென்று காலில் விழுகிறார்.

தனம் அதை பார்த்து புரியாமல் இருக்க, உங்களுக்கு இவங்களை முதலில் தெரியுமா என கேட்கிறார். ஆமாம் என கோதை சொல்ல, சரஸ்வதியை கோதை வலது கால் வைத்து உள்ளே வர சொல்கிறார். தனத்தை சரஸ்வதியை கூட்டிக் கொண்டு வர சொல்கிறார். அதை கேட்டு சரஸ்வதி மிகுந்த சந்தோசமாக இருக்கிறார். வீட்டிற்குள் வந்ததும் சரஸ்வதி புகைப்படத்தை பார்த்து சந்தோசப்படுகிறார். கோதை தமிழ் உயிருக்கு ஆபத்து வந்து அதை தனம் குடும்பத்தினர் காப்பாற்றியதாக சொல்கிறார். பின் கதிர் ஜீவா அனைவரும் வர முல்லை மீனா சுடிதார் போட்டிருக்கிறார். உங்க புது விருந்தாளியா என மீனா கேட்கிறார்.

தமிழ் அப்பாவும் சரஸ்வதி எப்போது வந்தாய் என்பது போல கேட்கிறார். மூர்த்தி சரஸ்வதியின் தாத்தாவும் என் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது போல கேட்கிறார். மூர்த்தி கதிர் முல்லையை அறிமுகம் செய்து வைக்கிறார். மீனா சீக்கிரமாக கிளம்புங்கள் என சொல்ல, தனம் புது பொண்ணு வரட்டும் போவோம் என சொல்கிறார். இன்னும் யாரெல்லாம் வரணும் என கேட்க எல்லாரும் ரெடி ஆனால் தமிழ் மட்டும் வேலை இருப்பதாக சொல்கிறார். தமிழ் அப்பா என்னப்பா நீயும் வர வேண்டும் என சொல்ல, வேலை இருக்கிறது என தமிழ் சொல்கிறார். அப்போது தமிழ் சரஸ்வதியை பார்க்க, சரஸ்வதி குடும்பம் எங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்கள் என சொல்ல, தமிழ் வருவதாக இருந்தால் வந்திருவான் என மூர்த்தி சொல்கிறார்.

தமிழ் எப்போதும் அப்படி தான் என கோதை சொல்ல, அப்படி எல்லாம் இல்லை யாரவது வா என சொன்னால் நான் வந்துருவேன் என தமிழ் நினைக்கிறார். சரஸ்வதி அம்மாவிற்கு போன் செய்து அப்பாவிடம் பேச வேண்டும் என சொல்கிறார். அப்பாவிடம் போனை எடுக்க இப்போது நான் தமிழ் வீட்டில் இருக்கிறேன் என சொல்கிறார். இங்கே வர வரைக்கும் நான் தமிழ் வீட்டிற்கு வரேன் என எனக்கு உண்மை தெரியாது என சொல்கிறார். மகாபலிபுரத்தை சுற்றிக்காட்ட தான் என்னை அனுப்பி வைத்தீர்கள் ஆனால் இங்கே தமிழ் குடும்பமும் கூட வராங்க என சொல்கிறார். இப்போ நான் கூட போகவா வேண்டாமா என கேட்கிறார். சரஸ்வதி அப்பா சரி போயிட்டு வா என சொல்கிறார். அதை கேட்டு சரஸ்வதி சந்தோசப்படுகிறார். பின் கோதை சரஸ்வதியை பூஜை ரூமிற்கு அழைத்து செல்கிறார். அப்போது சந்திரலேகா வர சரஸ்வதியை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!