பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே தள்ளும் கோபி, பணத்தை மீட்டு வரும் எழில் – வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பணத்தை இழந்த பாக்கியாவிற்கு கோபியின் அப்பா உதவி செய்ய நினைக்கிறார். ஆனால் பணத்தை எடுக்க முடியாது என வங்கி ஊழியர்கள் சொல்கின்றனர். இந்நிலையில் அடுத்த எபிசோட் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாக்கியலட்சுமி ப்ரோமோ:
பாக்கியலட்சுமி சீரியலில், பெரிய சமையல் ஆர்டரை செய்து முடித்த பாக்கியா 3 லட்சம் பணம் வாங்குகிறார். ஆனால் அவரின் அறியாமையால் பண மோசடி செய்யும் கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்து விடுகிறார். எழில் பண மோசடி செய்யும் கும்பலை எப்படியாவது பிடிப்பேன் என சொல்லி பைக் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். வீட்டில் பாக்கியாவை கோபி திட்டிக் கொண்டே இருக்க, ஜெனி அவருக்கு உதவி செய்ய நினைக்கிறார். ஆனால் பாட்டி மற்றும் செழியன் அவரை தடுக்கிறார்.
இந்தியாவில் ஒரே நாளில் 19,740 பேருக்கு கொரோனா தொற்று – 248 பேர் உயிரிழப்பு!
மேலும் எழில் பாக்கியாவின் பணம் எப்படியாவது கிடைக்க வேண்டும் என நினைத்து கஷ்டப்பட்டு தேடுகிறார். இன்று பணம் கண்டிப்பாக கொடுப்பேன் என பாக்கியா சொன்னதை கேட்டு அக்கம் பக்கத்தினர் மளிகை கடைக்காரர் பணம் கேட்டு வீட்டு வாசலில் சண்டை போடுகின்றனர். உடனே கோவப்பட்ட கோபி பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். உடனே கோபியின் அப்பா நான் உதவி செய்கிறேன் என சொல்லி பாக்கியாவை பேங்க் அழைத்து செல்கிறார்.
அக்.11 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
ஆனால் பேங்கில் இந்த பணத்தை தற்போது எடுக்க முடியாது, உங்க ஊரில் தான் எடுக்க முடியும் என சொல்கின்றனர். அதனால் வருத்தத்துடன் வீடு திரும்பி அங்கே நின்றவர்களிடம் பணம் எடுக்க முடியவில்லை என சொல்கின்றனர். உடனே கோபி பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். ஆனால் பாக்கியாவை அவர் வெளியே தள்ள எழில் அவரை புடித்து விடுகிறார். உன் பணம் கிடைத்து விட்டது என கையில் கொடுக்கிறார். அதை பார்த்ததும் பாக்கியா மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.