இந்தியாவில் ஒரே நாளில் 19,740 பேருக்கு கொரோனா தொற்று – 248 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய பாதிப்பு, உயிரிழப்பு மற்றும் டிஸ்சார்ஜ் நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் விளைவாக தொற்று ஓரளவு குறைந்து வந்தாலும் பாதிப்பை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,39,35,309 ஆக உயர்ந்துள்ளது. தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம்!
நேற்று ஒரு நாள் மட்டும் 79,12,202 பேருக்கு தடுப்பூசி செலுத்தபட்டது. இதுவரை இந்தியாவில் 93,99,15,323 பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். ஆனாலும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை 97% உயிரிழப்பில் இருந்து காப்பாற்ற முடியும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது.
அக்.11 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 248 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 4,50,375 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 23,070 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,36,643 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.