சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய (அக்.9) நிலவரத்தில் சவரனுக்கு ரூ.200 வரை மீண்டும் அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நிலவரம்
பண்டிகை நாள் நெருங்கி வரும் சூழலில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்வை கண்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பொது முடக்க தளர்வுகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் தங்க நகை வியாபாரம் கடந்த மாதங்களில் ஏற்றம், இறக்கம் கண்டு வந்தது. இதில் பெரும்பாலும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியான வகையில் சரிவை மட்டுமே சந்தித்தது. ஆனால் இந்த மாதத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஆபரணத் தங்க விலை மீண்டுமாக உயர்வடைய துவங்கியுள்ளது.
அக்.11 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இதற்கிடையே பண்டிகை காலம் நெருங்கி வருவதால் ஆபரணத் தங்கத்தின் விலை வாடிக்கையாளர்களை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது. ஏற்கனவே ஆபரணத் தங்க நகையின் விலை சவரனுக்கு ரூ.35,304 என விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இன்றைய விற்பனையிலும் மீண்டுமாக சவரனுக்கு ரூ.200 வரை விலை அதிகரித்துள்ளது.
நவம்பர் 10 வரை எட்டு நகரங்களில் இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 9) சவரனுக்கு ரூ.200 வரை உயர்ந்து ஒரு சவரன் நகை ரூ.35,504க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 வரை உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,438க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் மட்டும் உயர்ந்து ரூ.65.90க்கு விற்பனையாகிறது.