அக்.11 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
ஹிமாச்சல் பிரதேசத்தில் தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ள சூழலில் வரும் 11ம் தேதி முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை தொற்று கட்டுக்குள் வந்துள்ள சூழலில் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் மாநிலங்கள் தோறும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கையின் அடுத்த கட்டமாக வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்காக வகுப்புகள் துவங்க உள்ளது.
நவம்பர் 10 வரை எட்டு நகரங்களில் இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அந்த வகையில் அனைத்து வேலை நாட்களிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம் போல நடைபெறும். இருப்பினும், அனைத்து கல்வி நிறுவனங்களும் முறையான கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஹிமாச்சல் பிரதேசத்தில் செப்டம்பர் 27ம் தேதி முதல் 9 லிருந்து 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது.
தமிழக சத்துணவு மைய ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ஆக நீட்டிப்பு – அரசாணை வெளியீடு!
இந்த வகையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது, கட்டிடங்களை சீரான இடைவெளியில் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பிற வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத அல்லது விதிகளை மீறும் எந்தவொரு நபர் மீதும் பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005- ன் பிரிவு 51-60 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.