தமிழக சத்துணவு மைய ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ஆக நீட்டிப்பு – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சத்துணவு ஊழியர்களாக பணியாற்றி வரும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு இன்று (அக்டோபர் 9) முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஓய்வு வயது நீட்டிப்பு
தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அரசுப் பள்ளிகளில் பணி புரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இன்று (அக்.9) சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக நீட்டிததற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வு குறித்த ஆய்வறிக்கை 7 மொழிகளில் மொழிபெயர்ப்பு – முதல்வரிடம் ஒப்படைப்பு!
இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழக சட்டமன்ற பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின், அரசுப் பள்ளிகளை சேர்ந்த சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோருக்கு விதி 110ன் கீழ் ஓய்வு வயதை நீட்டிப்பதாக கடந்த செப்டம்பர் 7ம் தேதி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இணையவழி பணப்பரிமாற்றத்தில் அதிகபட்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்வு – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!
இந்த அறிவிப்பின் கீழ், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சத்துணவு மையங்களில் பணிபுரிந்து வரும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களின் ஓய்வு வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி, சத்துணவு மைய ஊழியர்களுக்கு ஓய்வு வயது நீட்டிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படுகிறது. இந்த அரசாணை இன்று முதல் நடைமுறைக்கு வரும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
Sir& Madam good news solluga