நீட் தேர்வு குறித்த ஆய்வறிக்கை 7 மொழிகளில் மொழிபெயர்ப்பு – முதல்வரிடம் ஒப்படைப்பு!
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கை நாட்டின் பல்வேறு 7 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து அவற்றை இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர்.
நீட் தேர்வு ஆய்வு அறிக்கை:
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சீட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
IPL 2021 – MI vs SRH: 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி!
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு கடந்த ஜூன் 10ஆம் தேதி அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்த நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு, கடந்த ஜூலை 14-ஆம் தேதி அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் ஆய்வின் அறிக்கையை சமர்ப்பித்தனர். அந்த குழு தாக்கல் செய்த அறிக்கை மக்கள் நல்வாழ்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 1,359 பேருக்கு கொரோனா பாதிப்பு – அரசு அறிக்கை!
நீட் தேர்விற்கு எதிரான தமிழக அரசின் ஆய்வறிக்கையை நாட்டின் மற்ற மாநில முதல்வர்களுக்கும் அனுப்பி வைப்பதற்கு எதுவாக அந்த அறிக்கை தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ,மராத்தி, பெங்காலி ஆகிய 7 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கும் அந்த அறிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.