வெண்பாவுடன் மீண்டும் இணைந்த பாரதி, சீரியலில் புதிய ட்விஸ்ட் – ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியலில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில், தற்போது பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெண்பாவும், பாரதியும் ஒன்றாக இருப்பது போல புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் TRPயில் முன்னிலையில் இருக்கும் பிரபலமான சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் 8 வருடங்களுக்கு பின் கதைக்களம் சென்று கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. இத்தனை நாட்களாக மறைத்து வைத்த உண்மைகள் அனைத்தும் வெளியாகி வருகிறது. ஆனால் இந்த சீரியலில் வெண்பா கதாபாத்திரம் பற்றி தெரியவரவில்லை. அவர் வழக்கம் போல தனது வேலைகளை செய்து வருகிறார்.
நவம்பர் 10 வரை எட்டு நகரங்களில் இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இதனால் கண்ணம்மாவிற்கு தான் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் கண்ணம்மாவை மிரட்டி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட சொல்கிறார் வெண்பா. அப்போது சௌந்தர்யா வர, விவாகரத்து பத்திரத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். என் குழந்தையை காப்பாற்ற எனக்கு வேற வழி தெரியவில்லை என கண்ணம்மா கதறி அழ ஒன்றும் புரியாமல் சௌந்தர்யா இருக்கிறார். பின் சௌந்தர்யாவிடம் என் குழந்தை எங்கே இருக்கிறாளோ என புலம்ப ஹேமா தான் உன்னுடைய குழந்தை என சௌந்தர்யா உண்மையை சொல்கிறார்.
தமிழக சத்துணவு மைய ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ஆக நீட்டிப்பு – அரசாணை வெளியீடு!
அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், வெண்பா பற்றிய உண்மையை பாரதி எப்போது தெரிந்துக் கொள்வார் என அனைவரும் ஆவலுடன் இருக்க, தற்போது இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட படபிடிப்புத்தள புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வெண்பாவும் பாரதியும் ஒன்றாக இருக்கின்றனர். இதை பார்த்த ரசிகர்கள் இன்னும் பாரதி வெண்பாவை நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Pl don’t hurt too much Kannamma like ladies pl