டிச.1ம் தேதி முதல் அமலுக்கு வரும் ஆட்டோ பயண கட்டண உயர்வு – அரசு உத்தரவு!

0
டிச.1ம் தேதி முதல் அமலுக்கு வரும் ஆட்டோ பயண கட்டண உயர்வு - அரசு உத்தரவு!
டிச.1ம் தேதி முதல் அமலுக்கு வரும் ஆட்டோ பயண கட்டண உயர்வு - அரசு உத்தரவு!
டிச.1ம் தேதி முதல் அமலுக்கு வரும் ஆட்டோ பயண கட்டண உயர்வு – அரசு உத்தரவு!

பெங்களூரில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கர்நாடக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த புதிய கட்டணங்கள் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ கட்டண உயர்வு:

கொரோனா தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் பொதுப்போக்குவரத்து சேவைகளுக்கு மாநில அரசுகள் தடை விதித்திருந்தது. கொரோனா பாதிப்பு நிலை குறைந்து கட்டுப்பாடுகளில் படிப்படியான தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த சமயத்தில் பொதுப்போக்குவரத்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு, பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சமீப காலமாக பெட்ரோல், டீசல், LPG விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

நவ.15 முதல் பள்ளி, கல்லூரிகளில் 100% மாணவர்களின் வருகைக்கு அனுமதி – அமைச்சகம் ஒப்புதல்!

தினம் தினம் புதுப்புது உச்சத்தை அடைந்து வருகிறது. இந்த விலை உயர்வினால் ஆட்டோ ஓட்டுனர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சாலைப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவரான ஜே.மஞ்சுநாத், பெங்களூரு நகர்ப்புற மாவட்ட ஆணையர் ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பாக, அனைத்து தரப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி, பெங்களூரில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கர்நாடக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. முதல் இரண்டு கிலோமீட்டருக்கு தற்போது 25 ரூபாயாக இருந்த அடிப்படைக் கட்டணம் 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.15 வசூலிக்கப்படும்.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு – இன்றைய நிலவரம்!

இறுதியாக கடந்த 2013ம் ஆண்டு ஆட்டோ கட்டணத்தை அரசு திருத்தியமைத்ததாகவும், புதிய கட்டணம் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.என். ஸ்ரீனிவாஸ் அவர்கள், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அரசு ஆட்டோ கட்டணத்தை உயர்த்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த சில ஆண்டுகளாக எல்பிஜி விலை உயர்ந்துள்ளது. 2013ல் ஒரு லிட்டர் ஆட்டோ எல்பிஜி கேஸ் விலை 28 ரூபாயாக இருந்தது, தற்போது அது 66 ரூபாயாக உயர்ந்துள்ளது. எனவே, குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்துமாறு மாநில அரசு மற்றும் போக்குவரத்து துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆட்டோ ஓட்டுனர்கள் அன்றாடம் வாழ்க்கை நடத்த போராடிக்கொண்டிருக்கும் இந்த நிலையில், கட்டணம் உயர்வு சரியான முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!