சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு – இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது. அதே போல் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
இந்தியாவில் கடந்த வருடம் முதல் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கத்தின் மீதான அதிக முதலீடு விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. தங்கம் விலை உயர்வு முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை அளிக்கிறது. ஆனால் நகை வாங்க நினைப்பவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்தியாவில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கத்தின் இறக்குமதியும் வெகுவாக குறைந்துள்ளது. தங்கத்தின் விலை உயர்வால் திருமணத்திற்கு நகை வாங்க நினைப்பவர்கள் பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றனர்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நவ.18 நேர்முகத்தேர்வு!
பொதுவாக பண்டிகை, திருவிழா, சுபமுகூர்த்த தினங்களில் மக்கள் நகை வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். இந்த நேரத்தில் நகை விலை வழக்கத்தை விட அதிகரிக்கிறது. கடந்த 4ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆபரணத் தங்க விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்தது. அதன் பின் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து சவரன் ரூ.36,112 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
நவ.10 & 19 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து சவரன் ரூ.36,216-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் 13 ரூபாய் உயர்ந்து ரூ.4,527-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.69.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்வால் நகைப்பிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.