நவ.10 & 19 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!
உத்திரப் பிரதேசத்தில் வருகின்றன நவம்பர் 10 மற்றும் நவம்பர் 19 ஆகிய இவ்விரண்டு தேதிகளில் சத் பூஜை மற்றும் கார்த்திக் பூர்ணிமாவை முன்னிட்டு பொது விடுமுறையை அறிவித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
பொது விடுமுறை
இந்தியாவில் தற்போது கொரோனா 2ம் அலை பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக தளர்த்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் இது பண்டிகை காலமாக இருப்பதால் அதனை கொண்டாடுவதற்காக மாநிலங்கள் தோறும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு – 115 பேர் அதிரடி கைது! சிபிசிஐடி தகவல்!
அந்த வகையில் வரவிருக்கும் நவம்பர் 10, 19 ஆகிய தேதிகளில் உத்திர பிரதேச மாநிலத்திற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சத் பூஜை மற்றும் கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு நவம்பர் 10 மற்றும் நவம்பர் 19 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை அறிவித்துள்ளார்.
1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.10ம் தேதி பள்ளிகள் திறப்பு – முதல்வர் உத்தரவு!
இந்த பண்டிகை காலங்களில் உத்திர பிரதேச மாநிலத்தில் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இப்போது சத் பூஜை உட்பட கார்த்திகை மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பதால் இதுபோன்ற சூழ்நிலையில் தூய்மை, பாதுகாப்பு, விளக்குகள், வாகன நிறுத்தம் மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று விழா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார்.