TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு – 115 பேர் அதிரடி கைது! சிபிசிஐடி தகவல்!

0
TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு - 115 பேர் அதிரடி கைது! சிபிசிஐடி தகவல்!
TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு - 115 பேர் அதிரடி கைது! சிபிசிஐடி தகவல்!
TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு – 115 பேர் அதிரடி கைது! சிபிசிஐடி தகவல்!

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

TNPSC முறைகேடு:

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு பணிகள் தேர்வாணையத்தின் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். காலிப்பணியிடங்களை பொறுத்து குரூப் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு கொள்கைக்குறி வினாக்கள் முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் பணிக்கு சேர்க்கப்படுகிறார். இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.10ம் தேதி பள்ளிகள் திறப்பு – முதல்வர் உத்தரவு!

இது குறித்து விசாரிக்க மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகம்மது ரஷ்வி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். சிபிஐ விசாரித்தால் தான் உண்மைகளை வெளிக்கொண்டு வர முடியும் என்றார் எனவே வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி தரப்பில் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் குரூப் 2 தேர்வில் தேர்வில் நடந்த முறைகேட்டில் 40 தேர்வர்கள், 3 காவலர்கள், 2 விஏஓக்கள், அரசு பணியாளர் தேர்வாணைய ஊழியர் ஒருவர் உள்ளிட்ட 59 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – குழந்தைகள் தின போட்டிகள்!

2016 இல் நடந்த விஏஓ தேர்வில் 9 பேர் முறைகேடாக தேர்ச்சி பெற்றனர். 8 தேர்வர், ஒரு காவலர் என மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் குரூப் 4 தேர்வில் 99 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதில், 39 பேர் முறைகேடாக தேர்ச்சி பெற்றனர். இதில் 95 தேர்வர்கள், 2 டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் உள்ளிட்ட 115 பேர் கைது செய்யப்பட்டனர். விடைத்தாள்களை சென்னைக்கு கொண்டு செல்லும் வழியில் முறைகேடு நடந்துள்ளது என்று சிபிசிஐடி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!