தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – குழந்தைகள் தின போட்டிகள்!

0
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - குழந்தைகள் தின போட்டிகள்!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - குழந்தைகள் தின போட்டிகள்!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – குழந்தைகள் தின போட்டிகள்!

தமிழகத்தில் வரும் நவ.14ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி இயக்குனர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு போட்டிகள்:

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் செயல்பட தொடங்கியுள்ளன. அந்த வகையில் கடந்த செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும் 19 மாதங்களுக்கு பிறகு கடந்த நவ.1ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு தினசரி வெப்பநிலை சரிபார்த்து அனுமதிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு – கொரோனா புதிய பாதிப்புகள் எதிரொலி!

அதனை தொடர்ந்து பொது சுகாதாரத் துறையின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையே கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களது பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுவது வழக்கமான ஒன்று. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் குழந்தைகள் தினம் கொண்டாட முடியவில்லை. தற்போது அந்த நிலை மாறி பள்ளிகள் செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டு குழந்தைகள் தினத்தை கொண்டாட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மக்களே உஷார் – தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை !

இத்தகைய முடிவு குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையிலும், மீண்டும் உற்சாகத்துடன் கல்வியை தொடங்க வழிசெய்யும் வகையிலும் அமையும் என்று எடுக்கப்பட்டுள்ளது. அதனால் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு நடத்தப்பட்ட நிகச்சி அறிக்கையை நவ.25ம் தேதிக்குள் 2 நகல்களில் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!