இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு – கொரோனா புதிய பாதிப்புகள் எதிரொலி!
தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா வழக்குகளை கருத்தில் கொண்டு இன்று (நவ.9) முதல் ஸ்ரீநகரின் மேலும் ஐந்து பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு கடுமையான முழு ஊரடங்கு உத்தரவை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு அமல்
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை பரவலின் தாக்கம் தற்போது கட்டுக்குள் வந்திருக்கக்கூடிய நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் மட்டும் கொரோனா புதிய பாதிப்புகள் எழுச்சி கண்டு வருகிறது. இதனை கவனத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் 5 பகுதிகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மக்களே உஷார் – தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை !
அதன் படி ஸ்ரீநகரின் லால் பஜார், ஹைதர்போரா, சனாபோரா, பெமினா, பெமினா ஹவுசிங் காலனி, பிலால் காலனி, எஸ்டிஏ காலனி ஆகிய இடங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்த கட்டுப்பாடுகள் இன்று (நவம்பர் 9) மதியம் 12 மணி முதல் அமலுக்கு வரும் நிலையில் இப்பகுதிகளில் அனைத்து அத்தியாவசிய சேவைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பகுதிகளில் தினசரி கொரோனா வழக்குகளின் விகிதம் 63% என பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (நவ.10) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அந்த வகையில் மளிகை, காய்கறி, இறைச்சி, பால் கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், அலுவலக பணியாளர்கள் அடையாள அட்டையுடன் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜம்மு காஷ்மீரில் நேற்று (நவ.8) ஒரு நாள் மட்டும் 111 புதிய கொரோனா வழக்குகளுடன் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இறப்புகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.