தமிழகத்தில் நாளை (நவ.10) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (நவ.10) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.10) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.10) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (10.11.2021) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

மின்தடை:

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு மின்சார துறையில் தொடர் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் மின் புகார் மையம் அமைக்கப்பட்டு மின் தொடர்பான குறைகள் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது. மேலும் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் மின் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

மின் பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பங்களின் அருகே மின் விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட்டு சரி செய்யப்படுகிறது. மின் நிலையங்களில் மின் இணைப்பு கம்பிகள் வயர்கள் மாற்றப்பட்டு பாதுகாப்பான மின் விநியோகம் உறுதி செய்யப்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மின் கசிவு ஏதும் ஏற்படாமல் மின்கம்பங்களை சரி செய்ய மின்சாரத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஈரோடு மாவட்டத்தில் நாளை (10.11.2021) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

நாளை அரசு பொது விடுமுறை அறிவிப்பு – முதல்வர் உத்தரவு !

அதனால் ஈச்சம்பள்ளி, முத்துக்கவுண்டன் பாளையம், மடத்துப்பாளையம், ராக்கியாபாளையம், பழனிக்கவுண்டன் பாளையம், கொம்பனைப்புதூர், பஞ்சலிங்கபுரம், எம்.கே.புதூர், காளிபாளையம், ஆராம்பாளையம், குளத்துப்பாளையம், பி.கே.பாளையம், பச்சாம்பாளையம், கருமண்டாம் பாளையம், மலையம்பாளையம், குட்டப்பாளையம், தாமரைப்பாளையம், சோளங்கபாளையம் ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!