தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 10 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அரசு அறிவித்துள்ளது.
இன்று விடுமுறை:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும் நிலை உருவாகி வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நாளை அரசு பொது விடுமுறை அறிவிப்பு – முதல்வர் உத்தரவு !
வெள்ளக்காட்சி அளிக்கும் பகுதிகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனே வெளியேற்றும் பணியை விரைந்து செயல்படுத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் காய்கறிகள் வரத்து இல்லாததால் காய்கறி விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கனமழை காரணமாக 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இன்னும் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து இன்று விடிய விடிய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்துக்கொண்டு இருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால் தென்காசி, நெல்லை, விழுப்புரம், மயிலாடுதுறை, மதுரை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளி,க ல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.