மக்களே உஷார் – தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை !

0
மக்களே உஷார் - தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை !
மக்களே உஷார் - தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை !
மக்களே உஷார் – தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை !

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் எச்சரிக்கை:

தமிழகத்தை ஒட்டிய வங்க கடல் பகுதியில் நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக, உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பலவிதங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்று, வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதன் காரணமாக நவம்பர் 10 மற்றும் 11ம் தேதிகளில் அதிகனமழை முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் நாளை (நவ.10) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

வழக்கமாக அதி கன மழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக ஆய்வு மையத்தால் வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும். அந்த வகையில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ள இடங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும், மிக கன மழை பெய்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கையும் விடப்படும். அதன்படி 10-ந் தேதி கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்டும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

முன்னதாகவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நேற்றும், இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது தென்காசி, நெல்லை, விழுப்புரம், மயிலாடுதுறை, மதுரை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை, விருதுநகர், கடலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!