‘ராஜா ராணி 2’ சீரியலுக்கு நடிகை ஆலியா மனசா பெறும் சம்பளம் – வாய் அடைத்து போன ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியின் முக்கிய மற்றும் பிரபல சீரியல் நடிகையான ஆலியா மனசா தற்போது தான் நடித்து வரும் ‘ராஜா ராணி 2’ சீரியலுக்கு பெறும் சம்பளம் பற்றிய விவரம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
நடிகை ஆலியா மனசா:
தற்போது திரைத்துறை நடிகைகளுக்கு இருக்கும் செல்வாக்கை விட சீரியல் நடிகைகளுக்கு தான் அதிகமாக செல்வாக்கு இருக்கிறது. அதிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்ததும், சீரியல் நடிகைகள் குறும்படம் மற்றும் திரைப்படங்களில் தங்களது கவனத்தினை செலுத்த ஆரம்பித்து விடுவர். அந்த வகையில் தற்போது பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை ஆலியா மனசா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியலின் மூலமாக பலரும் கவனம் ஈர்த்தார் என்று தான் கூற வேண்டும். அவர் அந்த சீரியலில் கதாநாயகனை நடித்த நடிகர் சஞ்சீவை சீரியலில் நடித்த போது காதலித்து வந்தார்.
பல எதிர்ப்புகளுக்கு பிறகு தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நடிகை ஆலியா மனசா திருமணம் முடிந்தும் கூட தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார். அதே போல ஒரு சில குறும்படங்கள் மற்றும் ஆல்பம் சாங்ஸ் ஆகியவற்றிலும் நடித்து வந்தார். இதன் காரணமாக இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்து வந்தது. பின்னர், அவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகினார். வளைகாப்பு நிகழ்ச்சி, குழந்தை பிறந்தது மற்றும் பெயர் சுட்டு விழா ஆகியவற்றை சஞ்சீவ் – ஆலியா தம்பதியினர் வெகு விமர்சையாக கொண்டாடினர்.
தற்போது ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு ஹிந்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சீரியலின் தமிழ் ரீமேக் ஆன ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடிகர் சித்துவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். பிரபல சீரியலான இதில் நடிப்பதற்கு நடிகை ஆலியா மனசா வாங்கும் சம்பளம் பற்றிய விவரம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரு நாளைக்கு இவர் 13 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் நடிகை ஆலியா மனசா கர்ப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.