தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நவ.18 நேர்முகத்தேர்வு!

0
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - நவ.18 நேர்முகத்தேர்வு!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - நவ.18 நேர்முகத்தேர்வு!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நவ.18 நேர்முகத்தேர்வு!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து தொடர்ந்து அஞ்சல் துறையில் காலியாக உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி வருகிறது. இந்த வாய்ப்பினை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை தொடர்ந்து அனைத்து நிறுவனங்களும் செயல்பட தொடங்கியுள்ளன. அரசுத் தேர்வுகள் நடத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றன. கூடிய விரைவில் அரசுத் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளிவரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கிடையில் பல்வேறு அரசு சார்ந்த காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது மாவட்ட வாரியாக அஞ்சல் துறையில் காலியாக உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி வருகிறது.

நவ.10 & 19 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!

அதன்படி தற்போது கோவை மாவட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு 18 முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் தகுதி உடையவர்களாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் 65 வயதுக்குட்பட்ட மத்திய மற்றும் மாநில அரசில் பணிபுரிந்தவர்களும் இந்த பணிக்கு தகுதியுடையவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இலவசமாக அஞ்சல் நிலையங்களில் அல்லது  [email protected].in   என்ற இ-மெயில் முகவரிக்கு கோரிக்கை அனுப்புவதன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.

TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு – 115 பேர் அதிரடி கைது! சிபிசிஐடி தகவல்!

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களுடன் வரும் நவ.18 ஆம் தேதி காலை 10 மணியளவில் தலைமை அஞ்சல் நிலையத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விபரங்களுக்கு 0422 – 2558 541 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கோவை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதனால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!