நவ.15 முதல் பள்ளி, கல்லூரிகளில் 100% மாணவர்களின் வருகைக்கு அனுமதி – அமைச்சகம் ஒப்புதல்!
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள் கீழ் நவம்பர் 15ம் தேதி முதல் 100% திறன் கொண்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொடர்புடைய கட்டுப்பாடுகள் பல தளர்த்தப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஆரம்ப பள்ளி வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு – இன்றைய நிலவரம்!
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலும் நவம்பர் 15 முதல் 100% திறனுடன் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக நேற்று (நவ.8) வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில், நவம்பர் 15 முதல் 100% திறன் கொண்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கொரோனா பாதிப்பால் ஒரு மரணம் கூட பதிவாகாத ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நவ.18 நேர்முகத்தேர்வு!
இப்போது பள்ளிகளை முழு திறனுடன் திறப்பதற்காக ராஜஸ்தான் முதன்மை உள்துறைச் செயலர் அபய் குமார் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, ‘முழு அளவில் பள்ளிகளை திறக்க பெற்றோர்கள் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட ஆசிரியர்களின் ஒப்புதல் தேவை. அதனால் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் தங்கள் ஊழியர்கள் எடுத்துள்ளதை உறுதிசெய்த பிறகு பயிற்சி நிறுவனங்கள் 100% திறனுடன் செயல்பட முடியும்’ என்று அரசாங்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது.