வாட்ஸ்அப் அக்கௌன்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – 18 லட்ச கணக்குகள் முடக்கம்!
வாட்ஸ்அப் கணக்குகளில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றாலோ அல்லது வாட்ஸ்அப் விதிமுறைகளை மீறினாலோ வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்படுகின்றன. ஏப்ரல் மாதத்தில் மட்டுமே 18 லட்சத்திற்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் கணக்கு:
தற்போது உலகமே ஆன்லைன் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் அதில் நடக்கும் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாலியல் குற்றங்களில் இருந்து பலவகையான மோசடிகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. அதாவது பிரபல சமூக ஊடகமான வாட்ஸ்அப் நிறுவனத்தை உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான கோடி மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இந்த வாட்ஸ்அப் நிறுவனத்தில் பல வகையான சேவைகள் அவ்வப்போது பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அதாவது எந்த நாட்டில் இருந்தாலும் எளிமையாக ஒரு செய்தியை வாட்ஸ்ஆப் செயலியின் மூலமாக உலகில் மூலையில் உள்ளவர்களுக்கும் அனுப்ப முடியும் மற்றும் வீடியோ கால் முறையின் மூலமாகவும் உலகில் எங்கிருந்தாலும் அவர்களை காணலாம். இந்த வாட்ஸப் கணக்குகளில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றால் அந்த வாட்ஸ்அப் கணக்குகள் மீது புகார் எழுப்பப்பட்டு அந்த வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
வேலையை நிறுத்த சந்திரகலா போட்ட திட்டம், தமிழின் முடிவு என்ன? “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் ப்ரோமோ!
இந்த புகாரின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் பல லட்சக்கணக்கான இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவதற்கென்றே சில விதிமுறைகள் இருக்கிறது. இந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அந்த வாட்ஸ்அப் பயனாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டு வந்த புகாரின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் மட்டுமே 18 லட்சத்திற்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டன. அதேபோல ஏப்ரல் மாதமும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் புகாரின் அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளது.