Post Officeல் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – மார்ச் 31 கடைசி நாள்! எச்சரிக்கை பதிவு!
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 9 வகையான சிறு சேமிப்பு திட்டங்களும், காப்பீடு திட்டங்களும் மக்களை பெருமளவில் கவர்ந்துவிட்டன. பலரும் இந்த திட்டங்களில் சேமிப்பை தொடங்க, முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சுகன்யா சம்ரிதி யோஜனா, பொது வருங்கால வைப்புநிதி(பிபிஎப்), தேசிய ஓய்வூதிய திட்டம்(என்பிஎஸ்) ஆகியவற்றில் நடப்பு நிதியாண்டு குறைந்தபட்ச தொகை டெபாசிட் செய்யாவிட்டால் செயலற்றதாகிவிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மார்ச் 31 கடைசி நாள்:
மத்திய அரசின் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் தான், சாமானிய மக்களின் சேமிப்பின் முதல் தேர்வு ஆகும். சேமிப்பு என்று வந்தவுடன் எதை கவனிக்கிறோமோ இல்லையோ வட்டியை பற்றி கட்டாயம் கவனிப்போம். சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டியை கருத்தில் கொண்டு தான் அதில் சேமிக்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுப்போம். அந்த வகையில் அஞ்சல் நிலைய சேமிப்பு திட்டத்திற்கு வட்டி, வங்கிகளை விட அதிகமாக கிடைக்கிறது. சிறு முதலீட்டில் அதிக முதிர்வுத் தொகையை பெறலாம், இதன் காரணமாகவே அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் செல்வ மகள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகிய திட்டங்களில் நடப்பு நிதியாண்டுக்கான குறைந்தபட்ச தொகையை இந்த மாதம் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்: இந்த திட்டத்தின் சந்தாதாரர்கள், இந்த மாதம் 31ம் தேதிக்குள் குறைந்தபட்சமாக ரூ.500 செலுத்தி கணக்கை உயிர்ப்புடன் வைக்கலாம். நடப்பு நிதியாண்டு எந்தவிதமான தொகையையும் செலுத்தாமல் இருந்தால், ரூ.50 அபராதம் வசூலிக்கப்படும். மேலும் நிலுவைத் தொகைக் கட்டமாகவும் ரூ.500 வசூலிக்கப்படும்.
தமிழகத்தில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் கவனத்திற்கு – மார்ச் 26 முகாம்!
PPF திட்ட வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்ச தொகையை கணக்கில் செலுத்தியிருக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளவை. இருப்பினும் குறைந்தபட்ச தொகையை செலுத்தா விட்டால் கணக்கு காலாவதி ஆகிவிடும். மேலும் கணக்கை உயிர்ப்பு செய்யாமல் PPF கணக்குதாரர், தன்னுடைய கணக்கில் இருக்கும் பணத்தில் இருந்து எந்த ஒரு கடனும் பெற முடியாது என்பது குறிப்பிட வேண்டியவை. இதை தடுக்கும் விதம் மார்ச 31ம் தேதிக்குள் குறைந்தபட்ச தொகையை செலுத்தி விட வேண்டும்.
தேசிய ஓய்வூதிய திட்டம்: இந்த கணக்குதாரர்கள், நடப்பு நிதியாண்டில் இதுவரை பணம் செலுத்தாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும். எனவே மார்ச் 31ம் தேதிக்குள் குறைந்தபட்சமாக ரூ.1000 செலுத்தி கணக்கை உயிர்ப்புடன் வைக்கலாம். குறைந்தபட்ச தொகையை கூட செலுத்தாமல் விட்டால், கணக்கு காலாவதியாகிவிடும். மீண்டும் கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வர ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும்.
ரூ.700க்கும் கீழ் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை – கலப்பு எரிவாயு சிலிண்டர் அறிமுகம்!
செல்வமகள் சேமிப்புத் திட்டம்: 2015ம் ஆண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக செல்வ மகள் சேமிப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்ட கண்ணகுத்தாரர், நடப்பு நிதியாண்டில் எந்தத் தொகையையும் செலுத்தாமல் இருந்தால், வரும் 31ம் தேதிக்குள் குறைந்தபட்சம் ரூ.250 செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்தினால் மட்டுமே கணக்கு உயிர்ப்புடன் இருக்கும், இல்லை என்றால் காலாவதி ஆகிவிடும். ஒருவேளை நடப்பு நிதியாண்டு எந்தத் தொகையும் செலுத்தாமல் இருந்து அடு்த்த நிதியாண்டு செலுத்தினால், ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.