TNUSRB SI தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – தேர்வாணையம் அறிவிப்பு!
கடந்த இரு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவிருக்கும் TNUSRB SI தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
TNUSRB SI தேர்வு
தமிழகத்தில் மட்டுமல்லாது அனைத்து நாடுகளிலும் கொரோனா நோய் தாக்கம் இருந்து வந்த காரணத்தால் அனைத்து இடங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக எந்த வித அரசு துறை தேர்வுகளும் நடத்தப்படவில்லை. காரணம், அரசு துறை தேர்வுகள் அனைத்தும் நேரடி முறையில் நடத்த வேண்டி இருந்ததால் நோய் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருந்தது. இதனால் இரண்டு ஆண்டுகளாக எந்த வித தேர்விற்கான அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது நோய் தாக்கம் குறைந்து வந்த காரணத்தால் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
12 ஆம் வகுப்பு படித்தவருக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
இதன் எதிரொலியாக TNPSC, TN TRB போன்ற தேர்வுகளுக்கான அறிவிப்புகளும் வெளியாகி வந்தது. இரு ஆண்டுகளுக்கு பிறகு இது போன்ற அறிவிப்புகள் வந்ததால், தேர்வர்கள் அனைவரும் ஆர்வத்துடன் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். தற்போது இதற்கு மத்தியில் TNUSRB என்று கூறப்படும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கான அறிவிப்பினை அறிவித்துள்ளது. மொத்தமாக 444 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், தகுதி உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நாளை (ஏப்ரல் 8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – அறிவிப்பு வெளியீடு!
நேற்றுடன் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், தேர்வர்கள் பலரும் கால அவகாசத்தினை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் தேர்வாணையம் தேர்விற்கு விண்ணப்பித்தற்கான கால அவகாசத்தினை வரும் ஏப்ரல் 17ம் தேதி வரை நீடித்துள்ளது. ஆன்லைன் மூலமாக இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் போது சில பிரச்சனைகள் இருந்து வந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.