TNPSC குரூப் தேர்வர்கள் கவனத்திற்கு – நேர்காணல் எப்போது? முழு விவரம் இதோ!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் தேர்வுகளை நடத்தியது. அதன்படி, அடுத்து தேர்வு முடிவுகள் மற்றும் நேர்காணல் போன்ற விவரங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் தேர்வு
தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசுத்துறைகளில் துணை ஆட்சியர், காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (DSP), வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் தற்போது TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரைக்கும் குரூப் 1 முதன்மை தேர்வுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான விவரங்கள் TNPSC தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த தேர்வு முடிவுகளை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழக அரசு பேருந்து ஊழியர்களின் கவனத்திற்கு – போக்குவரத்து துறையின் எச்சரிக்கை!
இப்போது, TNPSC குரூப் 1 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் ஜூலை 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, குரூப் 1 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய (TNPSC) அலுவலகத்தில் நேர்காணல் நடத்தப்படும் என்றும் இது குறித்து தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் SMS மூலம் தகவல்கள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.