தமிழக அரசு பேருந்து ஊழியர்களின் கவனத்திற்கு – போக்குவரத்து துறையின் எச்சரிக்கை!
அரசு பேருந்துகளில் பயணிகளிடம் பேருந்து ஊழியர்கள் கடுமையாக நடந்துகொள்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனால், ஊழியர்களுக்கு போக்குவரத்து துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. மேலும், பயணிகளிடம் இழிவாக நடந்துகொண்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணிகளிடம் பேருந்து ஓட்டுனர்கள் கடுமையாக நடந்துகொள்வதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. மேலும், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்ய இலவசம் என்பதால் பெண் பயணிகளை தரக்குறைவாக நடத்துவதாகவும் குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஒரு சில பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்தாமலேயே செல்வதாக பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுமட்டுமல்லாமல், பேருந்து நிறுத்தங்களில் ஒரு சில பயணிகள் மட்டும் நின்றிந்தாலும் பேருந்தை நிறுத்தாமல் செல்வதாக பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Exams Daily Mobile App Download
இதனால் போக்குவரத்துத்துறை அரசு பேருந்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பயணிகளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என சில விதிமுறைகளை கூறியுள்ளனர். அதாவது, பேருந்துகளில் பயணிகளை தரக்குறைவாக நடத்த கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பேருந்து பயணிகளிடம் ஊழியர்கள் கடுமையாக நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குபவரத்துத்துறை எச்சரித்துள்ளது.
நபார்டு வங்கியில் தேர்வில்லாத வேலை அறிவிப்பு – மாதம் ரூ.2,25,000 சம்பளம்!
பேருந்து நிறுத்தத்தில் ஒரு பயணி நின்றாலும் கூட பேருந்தை நிறுத்தி அந்த பயணியை ஏற்றி செல்லி வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று கூறி பயணிகளை பாதியில் இறக்கிவிட கூடாது மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளை நிறுத்தம் செய்ய கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெண் பயணிகளை எரிச்சலூட்டவோ அல்லது இழிவாகவோ நடந்துகொள்ள கூடாது எனவும், பெண் பயணிகளிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.