TNPSC குரூப் 4 & VAO எழுதியவர்கள் கவனத்திற்கு – Result எப்போது? முழு விவரம் இதோ!
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்கள் TNPSC தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த விவரத்தை பார்ப்போம்.
TNPSC குரூப் 4 & VAO தேர்வு
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிடப்பட்டது. இதில் குறிப்பிட்டபடி TNPSCயின் குரூப் 2, 2A தேர்வு கடந்த மே 21ம் தேதி அன்று நடைபெற்றது. இதையடுத்து குரூப் 4 & VAO தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற்றது. இத்தேர்வு மூலமாக 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை தமிழகத்தில் 21 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர். இத்தேர்வு அளவில் இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், இத்தேர்வில் தமிழ் பாடப்பகுதியில் 87-91 வினாக்களுக்கும், கணித பாடப்பகுதியில் 20-23 வினாக்களுக்கும், பொது அறிவு பாடபகுதியில் 56-61 வினாக்களுக்கும் சரியாக விடை அளிக்கலாம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான Answer Key தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த Answer Key-யின் அடிப்படையில் மாணவர்களிடம் கருத்து கேட்பு நடைபெற்றது. இதன் முடிவில் குரூப் 4 தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் இந்த ஆண்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD விகிதம் உயர்வு!
இங்கு கட் ஆப் மதிப்பெண்கள் என்று குறிப்பிடப்படுவது சரியான கேள்விகளின் எண்ணிக்கை குறிப்பிடுவதாகும். இதையடுத்து இத்தேர்வின் முடிவுகளுக்காக தேர்வர்கள் எதிர்பார்த்த வண்ணம் காத்திருக்கின்றனர். அதன்படி இத்தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தின் 2வது வாரத்தில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பின்பு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வர்கள் பணியில் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்