TNPSC குரூப் 4& VAO தேர்வர்கள் கவனத்திற்கு – OMR தாள் நிரப்பும் வழிமுறைகள்!
தமிழகத்தில் நாளை (ஜூலை 24) TNPSC குரூப் 4& VAO தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கான முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தற்போது தேர்வின் போது வழங்கப்படும் OMR தாளில் நாம் செய்ய வேண்டியவைகள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
TNPSC குரூப் 4 & VAO:
தமிழகத்தில் 7382 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப் 4 & VAO தேர்வானது நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இத்தேர்வு சுமார் 21 பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது TNPSC தேர்வாணையம் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் முக்கிய ஒன்று தேர்வர்களுக்கு வழங்கப்படும் OMR தாளில் நாம் செய்ய வேண்டிய விஷயங்களை தேர்வாணையம் தெரிவாக குறிப்பிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
வழிமுறைகள்:
- முதல் உங்களுக்கு OMR தாள் வழங்கப்பட்டவுடன் அது உங்களுக்கு உரியது தானா என நன்றாக சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு OMR தாளில் தேவையான விவரங்களை கவனமுடன் நிரப்ப வேண்டும்.
- இந்த OMR தாள் இரண்டு பக்கங்களைக் கொண்டது. இதில் உங்களுடைய பெயர், பதிவெண், பாடப்பிரிவு, தேர்வு மையம், நாள், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் சரியாக உள்ளதா பார்க்க வேண்டும்.
- OMR தாளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனே அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
- வினாத்தாள் கொடுத்த பிறகு அவற்றில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்தபின் OMR தாளில் நிரப்ப வேண்டும்.
வங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் 10 நாட்கள் விடுமுறை – முழு விவரம் இதோ!
- தேர்வு முடிந்த பின்னர், ஓவ்வொரு ஆப்ஷனிலும் எத்தனை வினாக்களுக்கு விடையளித்துள்ளீர்கள் என்பதை அதற்குரிய கட்டங்களில் நிரப்ப வேண்டும்.
- இறுதியாக, விடைகளின் எண்ணிக்கையை அறை கண்காணிப்பாளர் எழுதிய பின்னர், கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் கையெழுத்திடுங்கள்.
- OMR எக்காரணம் கொண்டும் சேதப்படுத்த கூடாது. கைரேகை வைத்த உடன் உங்கள் கையில் உள்ள மை OMR தாளில் படாதவாறு முன்னரே நன்கு துடைத்து கொள்ளுங்கள்.