தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கடைகள் திறப்பு நேர மாற்றம்! ஆய்வு செய்ய உத்தரவு!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாற்றப்பட்ட புதிய நேரத்தை கடை ஊழியர்கள் பின்பற்றுகின்றனரா என்று அலுவலர்கள் ஆய்வு செய்ய நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடை:
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுபவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு அதன் மூலம் மக்கள் ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பெற்று வருகின்றனர். தற்போது திமுக தலைமையினால் அரசு பதவியேற்றது முதல் ரேஷன் கடைகள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் பரவிய கொரோனா இரண்டாம் அலையின் போது 4000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. மேலும் இலவச மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது.
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்கள் கவனத்திற்கு – கல்லூரிகள் திறப்பு, தேர்வு குறித்த அறிவிப்பு!
அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பும் வழங்கப்பட்டது. அதனால் மாதாந்திர அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகள் செயல்பட அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்காமல் விடுபட்டவர்கள் அத்தியாவசிய பொருட்கள் பெறாதவர்கள் பயன் பெற்றனர். இந்த நிலையில் ரேஷன் கடைகள் வழக்கமாக செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை; மதியம், 2:00 முதல் மாலை, 6:00 மணிவரை செயல்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நேரத்தை பெரும்பாலான ரேஷன் கடைகளில் பின்பற்றுவதில்லை என்று புகார்கள் வந்துள்ளது. அதனால் கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் இயங்கும் ரேஷன் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டில் இயங்கும் ரேஷன் கடைகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆ குறித்த நேரத்தில் ரேஷன் கடைகள் திறந்து செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.